states

ஜனநாயக மாண்புகளை மீறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி விலக சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, அக். 23- ஜனநாயக மாண்புகளை மீறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் பதிவாளர் முனைவர் சிவராஜ் அதிகாரத்தை தவ றாக பயன்படுத்தி ஊழலில் ஈடு பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிவராஜ் ருசா ஒருங்கிணைப்பாளர், சென்டாக் ஒருங்கிணைப்பாளர், மாநிலத் திட்ட இயக்குனரகத்தின் ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகள் ஒரு நபருக்கு வழங்கப் பட்டுள்ளது. அவர் மேற்கண்ட பதவி யின் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தியுள்ளார். துவக்க விசாரணையில் பதிவாளர் சிவராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை உள்ளதாகவும், உண்மை யாகவும் இருக்கக் கூடும் எனத் தெரி கிறது என்று புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் அக்டோபர் 21இல் வெளியிட்ட பணி நீக்க ஆணை குறிப்பிடுகிறது. மேலும் அவரைப் பற்றி, ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மேலும் பல புகார்கள் வந்துள்ளன. மேலும் இந்த வழக்கு முடியும்வரை புதுச்சேரியை விட்டு அவர்  வெளியூர்களுக்கு செல்லக் கூடாது என்றும் புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தரால் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை போன்று, மக்களை நம்ப வைக்கும் வகையில் துடைபாக சில நேரங்களில் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் உண்மையான ஊழல் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படுவதில்லை. அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் மட்டத்தில் இவர்களுக்கு உள்ள நெருக்கமான தொடர்பின் காரணமாக புனிதர்களாக மாறிவிடுகின்றனர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழக பதிவாளர் பிரச்சினையிலும் கடுமையான நடவடிக்கைகள் இருக்குமா? என்பது கேள்விக்குறியே. துணைநிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்ட பதிவாளர் சிவராஜ் மீதான நட வடிக்கை 3 மணி நேரத்தில் திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? ஆளுநரின் இத்தகைய நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பல சந்தே கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வருக்கும், ஆளுநருக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வியும் எழு கிறது. எனவே என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு இது பற்றிய உண்மை விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான நடைமுறை உத்திகள் சம்பந்தமாக கடந்த வாரம்  பாஜக சார்பாக நடை பெற்ற இணைய வழி கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் பங்கேற்றது தொடர்பாக கடுமையான விமர்ச னங்கள் எழுந்துள்ளன. சட்ட மாண்புகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய ஆளுநர் பாஜக தலை வரைப் போல செயல்படுவது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.  ஜனநாயகத்தின் மீது ஆளுநருக்கு சிறிதளவும் அக்கறை இல்லை என்பதைத்தான் அவரின் செயல்பாடு வெளிப்படுத்துகிறது. மேலும் புதுச்சேரி மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு ஜன நாயக மாண்புகளை அழித்து வரும் துணைநிலை ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.