states

img

இது குழந்தைகளின் ‘பொன்னியின் செல்வன்’

புதுச்சேரி, நவ. 27- பாண்டி மெரினா கடற்கரை பொழுது போக்கு மையத்தில் சோழர் தர்பார் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த தர்பார் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தை கள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்க ளான பொன்னிய செல்வன், ஆதித்த கரி காலன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, பூங்குழலி, வானதி, ஆழ்வார்க்கு அடியார், பழுவேட்டரையர் உள்ளிட்ட பல பாத்திரங்களின் ஒப்பனையில் தோன்றினர். குழந்தைகள் மழலைத் தமிழில் பேசி நடித்தது பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தது. சில குழந்தைகளின் நடிப்பை மீண்டும் ஒருமுறை பார்வை யாளர்கள் ரசித்தனர்.

;