தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களை கைது செய்ய வேண்டும், ஏபிவிபியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பைசல் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் சீசன், ஸ்ரீநாத், சிபிநந்தன், டீர்தா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.