புதுச்சேரி,ஏப்.11- குடியிருக்கும் இடத்திலேயே இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட செண்பக விநாயகர் கோவில் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வருகின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு மாவட்ட வருவாய்த் துறை சார்பில் இலவச மனைப்பட்டா கருவடிக் குப்பம் வெள்ளவாரி ஓடை பகுதியில் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட இடமானது வெள்ளவாரி ஓடையாகும். அப்பகுதியில் யாரும் குடியிருக்க வாய்ப் பில்லை. எனவே தற்போது குடியிருக்கும் பகுதியிலேயே இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பேட்டையன் சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் வல்லவனிடம் மனு அளிக்கப் பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், இன்னும் ஒரு மாதத்திற்குள் வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் உழவர்கரைநகர செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி, மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், அந்த பகுதி நிர்வாகிகள் குப்பு சாமி, வாசு, செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.