states

img

4 வழிச் சாலைக்காக வீடு, கடைகள் அகற்றம்: பாகூர் கிராம மக்கள் ஆவேசம்

புதுச்சேரி, செப். 8- சென்னை - நாகப்பட்டினம் 4 வழிச் சாலை அமைக்கும் பணிக்காக சாலை யின் இருபுறமும் இருந்த ஆயிரக் கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறு வனங்கள், அகற்றப்பட்டன. இந்நிலையில் பாகூர் பகுதியில் 4 வழி சாலைக்காக பொது மக்கள் வசிக்கும் இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றி னர். இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த மக்கள் முறையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்காமல் சாலையை அமைக்க முயல்வது, குடி நீர் இணைப்புகளை துண்டிப்பது, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு வயர்களை துண்டிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழ னன்று (செப். 8) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;