states

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி: அரசு நிலம் மீட்பு

புதுச்சேரி, டிச. 16- புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட கசாப்புக் காரன்தோப்பு அருகே உள்ளது சோலை நகர் தெற்கு மீனவர் குடியிருப்பு கிராமம். கிழக்க கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த நிலம் அரசு புறம்போக்கு நிலமாகும். இந்த இடத்தில் 40 ஆண்டுகாலமாக 44 மீனவ குடும்பங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்ற னர். இந்நிலையில், கென்னடி கிருஷ்ணன் என்பவர் தனது பண பலத்தால், தன்னுடைய இடத்தில் இவர்கள் குடியிருப்பதாகக் கூறி புதுச்சேரி மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். மேலும், அப்பகுதி மக்களை காலி செய்வதற்கு அரசு இயந்திரத்தை தனக்கு சாதகமாக செயல்படுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து, மீனவர்கள் குடி யிருக்கும் இடம் அரசு புறம்போக்கு நிலம் என்று உறுதி செய்து நீதிமன்றம் புதனன்று (டிச. 14) தீர்ப்பு வழங்கியத தோடு, கென்னடி கிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கு முக்கிய காரணமே, மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டமாகும். அதே போல், மீனவர் குடி யிருப்புகள் அருகில்இருந்த, கசாப்புகாரன் தோப்பு பகுதி யில் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வந்த 22 குடும்பங்களையும், கென்னடி கிருஷ்ணன் அடியாட் களை வைத்து அப்புறப் படுத்த முயன்றார். அப்போதும் பாதிக்கப்பட்ட 22 குடும்பங் களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் பாதுகாக்கப்பட்டன.  மாநிலக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆர்.சரவணன் பாதிக்கப்பட்ட மக்க ளுடன் களத்தில் நின்று போராடி னார். அத்தகைய போராட்டத்தின் விளைவாகவே தற்போது மீனவ குடும்பங்கள் வசித்து வரும் நிலம் அரசு புறம்போக்கு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாராட்டு
கசாப்புகாரன் தோப்பு பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் முயற்சியால்தான் அரசு நிலம் பாதுகாக்கப்பட்டது என்பதால்  வினாயகம் தலைமையில் மீனவர்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.