states

img

ஊழியர்களை பழிவாங்கும் பாரதியார் கிராம வங்கி நிர்வாகம்

புதுச்சேரி, நவ.25- வாடிக்கையாளர்களை பழி வாங்கும் பாரதியார் கிராம வங்கி நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் வங்கியின் கீழ் செயல்படும் புதுவை பாரதியார் கிராம வங்கியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், போனஸ் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக போராடும் தொழிற்சங்க தலை வர்களை பழிவாங்கும் நட வடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும். ஊழியர்களை ஒருநாள் விட்டு ஒருநாள் பணிக்கு வரச்சொல்லும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கிளை களின் வணிகத்திற்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை அருகே உள்ள பாரதியார் கிராம வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், தேசிய கிராம வங்கி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் சோலை மாணிக்கம், அகில இந்திய கிராம வங்கியின் தமிழ் மாநில அமைப்பு செயலாளர் ஆன்டோ ஆல்பர்ட், சிஐடியு தலைவர் பிரபுராஜ், துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்டோபர், எஸ்பிஐ வங்கியின் அலுவலர் சங்கத்தின் தலைவர் வீர.அரிகிருஷ்ணன், இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.