states

img

புதுச்சேரியில் 54 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி, ஜூலை 11- புதுவையில் 804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 45, காரைக்காலில் 6, ஏனாமில் 3 பேர் என புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 691, காரைக்காலில் 119, ஏனாமில் 23, மாகியில் ஒருவர் என 834 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 6, காரைக்கா லில் 29, ஏனாமில் 7 பேர் என 42 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முகக் கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

;