states

img

ரூ.1,000 நிதியுதவி திட்டத்தில் 70,000 குடும்பத் தலைவிகள் தகுதி

புதுச்சேரி,பிப்.16-  புதுச்சேரியில் ரூ.1,000 நிதி யுதவி திட்டத்திற்காக மொத்த மாக 70 ஆயிரம் குடும்பத் தலைவி கள் கணக்கு எடுக்கப்பட்டுள்ள தாக முதல்வர் ரங்கசாமி தெரி வித்துள்ளார். புதுச்சேரி - விழுப்புரம் சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாக ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் திகழ்கிறது. இந்தப் பாலத்தில் 24 மணி நேரமும் பேருந்துகள், லாரிகள், சரக்கு வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்து வம் வாய்ந்த இந்த பாலம் கட்டப் பட்டு பல ஆண்டுகள் ஆவ தால் மிகுந்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த கனமழை யின்போது மேம்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. மேம்பாலம் குறுகியதாக இருப்பதாலும், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிக மாவதாலும் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.  மேலும், எம்.என்.குப்பம் முதல் இந்திரா காந்தி சிலை சதுக்கம் வரையில் சாலை அகலப் படுத்தப்படவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஒன்றிய சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் இதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தது. இந்நிலை யில், புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை சார்பில் ஆரிய பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம், சாலை கள் மற்றும் பக்கவாட்டு வாய்க்கால்கள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வரு கிறது. இப்பணிகளை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வியாழ னன்று(பிப்.16)  பார்வையிட்டார். அப்போது மேம்பாலத்தின் மேல் தளத்தில் தூண்களில் நிறுவும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் ரங்கசாமி கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் 280 கி.மீ சுற்றளவுக்கு சாலைகள் உள்ளன. இவற்றில் 140 கி.மீ  நீளத்திற்கு சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள சாலைகள் இரண்டு, மூன்று மாதங்களில் போட்டு முடிக்கப்படும். இதேபோன்று உட்புற சாலைகளை மேம்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம். இன்னும் ரூ.38 கோடி கொடுக்க இருக்கிறோம். அந்த நிதியில் உட்புற சாலைகளை மேம்படுத்த உள்ளோம்”என்றார். கிராமங்களை இணைக்கின்ற சாலை பணிக்கான நிதியும் கொடுக்க இருக்கிறோம். அந்தப் பணிகளையும் விரைவில் தொடங்க இருக்கிறோம். நகர்புறங்களில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும்.  மாணவர்களுக்கான சைக்கிள், லேப்டாப் கொடுக்க இருக்கின்றோம். மாண வர்களுக்கு நிதியுதவி அனைத்தும் வழங்கப்பட்டு வரு கின்றது. முதியோர் உதவித் தொகையையும் சரியாக கொடுத்து வருகிறோம். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி திட்டத்தில் முதல்கட்டமாக 13 ஆயிரம் பேருக்கு கொடுத்துள்ளோம். அடுத்ததாக, 25 ஆயிரம் பேருக்கு விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.