அவுரங்காபாத் நாடு முழுவதும் செப்டம்பர் 7 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட்டது. இந்த நாயகர் சதுர்த்தி விழா வில் தமிழ்நாடு, கேரளா, தில்லி, ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர, பாஜக ஆளும் மாநிலங்கள் உள் ளிட்ட மற்ற மாநிலங்களில் இந்துத் துவா குண்டர்கள் விநாயகர் சிலை ஊர்வலத்தை வைத்து இந்து-முஸ்லிம் மக்களிடையே வன்முறை யை கட்டவிழ்த்து விட்டனர். இதில் கர்நாடகா மாநிலம் மண்டியா, குஜ ராத் மாநிலம் சூரத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒரு சில இடங்களில் மிக மோசமான அள வில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசு அதிரடிப் படையை களமிறக்கி வன் முறையை துரிதமாக ஒடுக்கி, மாண்டியாவில் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது. ஆனால் குஜராத், மகா ராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து வன்முறை - பதற்றம் நீடித்து வருகிறது.
பீகாரில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம்
பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் அவுரங்கா பாத் மாவட்டத்தில் உள்ள ராபிகஞ்ச் பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கும் ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்துள்ளது. ராபிகஞ்ச்சின் மத்திய பகுதியான முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில், விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வகுப்புவாத ரீதியிலாக வெறுப்புப் பேச்சை வெளிப் படுத்தி கொக்கரித்துள்ளனர். இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வெடித்தது மோதல். எனினும் போலீ சார் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரியளவில் வன்முறை வெடிக்கவில்லை. இதனால் ராபிகஞ்ச் பைபாஸ் பகுதி வன்முறையில் இருந்து தப்பியது. இச்சம்ப வம் தொடர்பாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவுரங்காபாத் துணை பிரிவு போலீஸ் அதி காரி அமித் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அவுரங்காபாத் மாவட்டத்தில் வன்முறை பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
துணிகளால் மறைக்கப்பட்ட மசூதிகள்
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா அரசின் செயலால் சர்ச்சை
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வ ராக இருப்பவர் ரேவந்த் ரெட்டி. அம்மாநில தலை நகர் ஹைதராபாத்தில் செப்., 17 அன்று விநாய கர் சிலைகளை நீர்நிலை களில் கரைக்க ஊர்வ லம் நடைபெறவுள்ளது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் பொழுது வன்முறை சம்பவங் களை தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஹைதராபாத்தில் உள்ள ஏக் மினார் மஸ்ஜித், மஸ்ஜித் இ மெஹபூப் ஷாஹி மற்றும் ஜாமியா மஸ்ஜித் போன்ற மசூதிகள் துணிகளால் மூடப்பட்டிருந்தன. பாஜக ஆளும் மாநிலங்கள் பின்பற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலமான தெலுங்கானா அர சின் இந்த நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
ஆர்எஸ்எஸ் - ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டி தனது ஆரம்ப கால அரசியலில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தார். அதன்பின் பிஆர்எஸ் கட்சி யில் சில காலம் இருந்த ரேவந்த் ரெட்டி சமீபத்தில் காங்கி ரஸ் கட்சியில் இணைந்து முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைக் கொண்டாடும் நெட்டிசன்கள்
இராமநாதபுரத்தில் இந்து - முஸ்லிம் மக்கள் இணைந்து நடத்திய விநாயகர் ஊர்வலம்
விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசியல் ஆதாயப் பொரு ளாக எடுத்துக்கொண்ட ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்து - முஸ்லிம் மக்களிடையே வன் முறையைத் தூண்டிவிட்டு வரு கின்றனர். இதில் பாஜக ஆளும் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்க ளில் இன்று வரை வன்முறை பதற் றங்கள் நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரத் தில் இந்து - முஸ்லிம் மக்கள் இணைந்து விநாயகர் ஊர்வலம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநாய கர் சிலை ஊர்வலத்தில் தப்பாட் டத்துடன் இந்து - முஸ்லிம் மக்கள் நடனம் ஆடியும், வாணவேடிக்கை, அன்னதானம் என பிரம்மாண்ட நிகழ்வுடன் விநாயகர் சிலையை வைகை ஆற்றில் கரைத்தனர். விநா யகர் சிலை ஊர்வலத்தை அரசியல் ஆதாய வன்முறைப் பொருளாக பாஜக பயன்படுத்தி வரும் சூழலில், தமிழ்நாட்டிலோ இந்து - முஸ்லிம் மக்கள் இணைந்து நடத்திய விநா யகர் ஊர்வலம் மத நல்லிணக்கத் திற்கு பறை சாற்றுகிறது என நெட்டி சன்கள் இராமநாதபுரம் மக்களுக்கு வாழ்த்துக்களுடன் மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர்.