states

img

பீகார்: பள்ளி மாணவி கேள்விக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அநாகரிக பதில் 

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவர் கேட்ட கோள்விக்கு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ரா அநாகரிகமாக பதிலளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ரா. பாட்னாவில் நடைபெற்ற `அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்’ என்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். இதில், 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஜோத் கலந்துரையாடினார். அப்போது, அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு 20 முதல் 30 ரூபாய் வரையிலான சானிட்டரி நாப்கின்களை அரசால் வழங்க முடியாதா?” என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கவுர், ``இப்ப நாப்கின் கேட்பீர்கள்; நாளைக்கே ஜீன்ஸ் பேன்ட் தாருங்கள் என்பீர்கள். பிறகு, ஏன் நீங்கள் ஷூக்களை தரக்கூடாது என்பீர்கள். கடைசியாக, குடும்ப கட்டுப்பாடு முறைகளையும் காண்டம் எல்லாம்கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்” என்று அநாகரிகமான முறையில் பதிலளித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவுரின் அநாகரிகமான பதில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.