பீகார்,அக்.02- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்த இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் நீரில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி நீரில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர். விமானிகள் பத்திரமாக இருப்பதாக தகவல்.
நீரில் விழுந்த ஹெலிகாப்டரிலிருந்து மக்கள் நிவாரணப்பொருட்களி எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.