states

img

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 4 பேர் உயிரிழப்பு  

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் கடந்த 3 நாட்களில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

பாட்னா – பேட்டையா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோபார்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்கள் உட்பட கள்ளச்சாராயம் குடித்தவர்களில் கடந்த 3 நாட்களில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுவரை 187 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 60 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

;