states

img

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்வு  

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.  

கோபார்கஞ்ச் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் தீபாவளியைக் கொண்டாட கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தின் தலைமையகமான பெட்டியாவில் உள்ள தெலுவா கிராமத்தில் 8 பேரும், கோபால்கஞ்சில் சந்தேகத்திற்கிடமான கள்ள மதுபானத்தை உட்கொண்ட 8 பேரும் பலியாகினர்.  

இதேபோல் முகமதுபூர் என்ற கிராமத்திலும் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் பலி எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. 

;