பீகாரில் கள்ளச்சாரயம் அருந்திய 18 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள இஷாவ்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் செவ்வாயன்று கள்ளச்சாரயம் அருந்தி உள்ளனர். இதில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.