states

img

பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம்!

பீகாரில் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த ஒரு மாதத்தில் இடிந்து விழுந்த 15-வது பாலம் இதுவாகும்  

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றை கடப்பதற்காக பொதுப்பணித் துறையால் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நேற்று முன்தினம் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலம் ஏற்கெனவே 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்குள் பீகார் மாநிலத்தில் 15 பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், ஏற்கெனவே நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையைச் சேர்ந்த 16 பொறியாளர்களை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றது