states

img

மாணவியர் விடுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த துணைவேந்தர் பஞ்சாபில் மாணவிகள் போராட்டம்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ளது ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் மாண வியர் விடுதியும்  உள்ள நிலையில், எந்தவித முன்னறி விப்பும்  இன்றி பல் கலைக்கழக துணை வேந்தர் ஜெய்சங்கர் சிங் மாணவிகளின் விடுதிக்குள் சென்றார். விடுதி தொடர்பு டைய மாணவிகள் மட்டுமே விடுதிக்குள் நுழைய முடியும். மேலும் விடுதி வளா கத்திற்குள் பெற்றோர்கள் கூட உள்ளே செல்ல அனுமதி இல்லை என சட்டப் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் விதிமுறைகள் உள்ளன. இவ்வாறு விதி கள் உள்ள நிலையில், அனுமதியின்றி விடுதிக்குள் நுழைந்த துணைவேந்த ருக்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போராட்டக்குழுவில் உள்ள மாணவி ஒருவர் கூறுகையில், “முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு போதிய வசதிகள் இல்லாதது தொ டர்பாக புகார் வந்ததால், துணைவேந்தர்  விடுதிக்குள் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் விடுதிக்குள் ஆய்வு நடத்துவ தாக இருந்தால், மாணவிகளுக்கோ அல்லது விடுதி காப்பாளருக்கோ முன்ன றிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. மேலும், ஆய்வுக்கு வந்த அவருடன் பெண் ஆசிரியர்களோ, காவலர்களோ இல்லை. 

குளித்துவிட்டு அறைக்குள் 
வந்த மாணவியிடம்...

ஆய்வுக்கு வந்த துணை வேந்தர் நேரடியாக மாணவிகளின் அறைக்கு வந்தார். குளித்துவிட்டு அறைக்குள் திரும்பிய மாணவியிடம் துணை வேந்தர் விசாரணை நடத்தினார். அந்த மாணவி தனது உடையை சரியாக அணிவதற்குக் கூட போதிய அவகாசம் வழங்கப்பட வில்லை. இவ்விசயத்தில் துணைவேந்தர் பதவி விலக வேண்டும். அவர் மாணவிக ளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என அவர் கூறினார்.

இவ்விவகாரம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில அரசு விசாரணையை துவங்கியுள் ளது. மேலும் விவகாரம் பெரிதானதால் மாணவிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டி 9 பேர் கொண்ட குழுவையும் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.