states

img

நேபாளத்தில் இந்திய பேருந்து விபத்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த 41 பேர் உயிரிழப்பு

நேபாள நாட்டின் தனாஹுன் மாவட் டத்தில் 43 பயணிகளுடன் உத்த ரப்பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து (UP FT 7623) ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மார்ஸ்யாங்டி பகுதியில் உள்ள ஐனா  பஹாரா ஆற்றில் கவிழ்ந்து வெள்ளி யன்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்த நிலையில், படுகாயங்களுடன் 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். மேலும் காணாமல் போன 11 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா வெள்ளியன்று தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 11 பேர் மற்றும் படுகாயமடைந்த 16 பேரில் பலர் உயிரிழந்ததாகவும், பலி யான இந்தியர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாகவும் நேபாள அரசு வெள்ளியன்று நள்ளிரவு அறிவித்தது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்...

விபத்துக்குள்ளான பேருந்து உத்த ரப்பிரதேச மாநில பதிவெண் கொண்டது என்பதால் உயிரிழந்தவர்கள் அனைவ ரும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதலில் தகவல் வெளியாகியது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த 43 பேர் ஆன்மிகச் சுற்றுலா சென்ற பொழுது தனாஹுனில் விபத்தில் சிக்கியுள்ளனர் என்றும், உயிரிழந்த 43 பேரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் அம்மாநில அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.