states

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை வழங்க தாமதம் ஏன்?

சென்னை, அக். 28- கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக காலம் தாழ்த்தாமல் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அரசு மருத்துவரான ஏ.கே.விவேகா னந்தன் 2020 ஆண்டு நவ.22 அன்று பணியில் இருந்தபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மனைவி வி.ஆர்.திவ்யா வுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி  அப்துல் குத்தூஸ் முன்பாக விசார ணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நந்தகுமார், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவரான விவேகானந்தன் இறந்து 2 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப் படவில்லை. பொறியியல் பட்டதாரி யான அவருடைய மனைவி 2 குழந்தை களுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருகிறார். எனவே அவருக்கு  கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்தும் அதற்கும் பதில் இல்லை.இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு தரப்பில் அவகாசம் கோரப்படு கிறது, என ஆட்சேபம் தெரிவித்தார்.  அதையடுத்து நீதிபதி,  இதுதொடர்பாக தமிழக அரசு இனி மேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க  வேண்டுமென அறிவுறுத்தி, விசா ரணையை நவ.18-க்கு தள்ளி வைத்துள்ளார்.