states

img

தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துக டிச.4 நாடாளுமன்றம் நோக்கி பேரணி

       ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் ஐத ராபாத்தில் தேசிய தலித் உச்சி மாநாடு நடைபெற் றது. 25 மாநிலங்களிலிருந்தும் யூனி யன் பிரதேசங்களிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 350 பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.பல்வேறு மாநிலங்க ளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்  கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல். சி.க்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

     தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், துணைப் பொதுச் செய லாளர் ப.செல்வன், ஆதித் தமிழர்  பேரவையின் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், ஆதித் தமிழர்  கட்சித் தலைவர் கு.ஜக்கையன், திரா விடர் தமிழர் கட்சித் தலைவர் வெண்  மணி உள்ளிட்டு தமிழகத்தின் 18 தலித் இயக்கங்களிலிருந்து மாநாட்டில் பங்கேற்றனர்.  

     முன்னாள் யுஜிசி தலைவர் பேரா. சுக்தேவ் தோரட் தலித்துகளின் விடு தலையில் கல்வியின் முக்கியத்து வத்தை விளக்கி உரையாற்றினார்.

உயர்நிலைக் குழு

      ஒன்றிய பாஜகவின் தலித் விரோத நடவடிக்கைகள் மிகப் பிர தானமாகப் பேசப்பட்டது. 2024 இல் அதற்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. மல்லேபள்ளி லக்ஷ்மய்யா, ராமச்சந்திர டோம், நிர்மல், திரேந்திர ஜா, குல்சார் சிங்  கோரியா, விக்ரம் சிங், கர்னல் சிங்,  பீனா பள்ளிகல், என்.சாய் பாலாஜி, பி. வெங்கட் ஆகியோர் கொண்ட உயர்  நிலைக்குழு தேர்வு செய்யப்பட்டது.

ஒரு கோடி கையெழுத்து

      செப்டம்பர், அக்டோபர் மாதங்க ளில் மாநில மாநாடுகள் ஒரு கோடி  மக்களிடம் கையெழுத்து பெற்று  இந்திய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க  டிசம்பர் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி தலித் மக்களின் அணி வகுப்பு நடைபெறும்.

      2024 தேர்தலுக்கான தலித்  நிகழ்ச்சி நிரலை நிறுவுவதற்கும், பெருநிறுவன மற்றும் வகுப்புவாத பாஜக அரசாங்கத்தின் தோல்வியை உறுதி செய்வதற்கும், ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதையும், அரசிய லமைப்பு பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்திட உச்சி மாநாடு அனைத்து தரப்பு மக்களுக்கும் அறைகூவல் விடுத்தது.