states

img

தெலுங்கானாவில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

தெலுங்கானாவில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

;