states

img

தெலுங்கானா சாலை விபத்தில் 4 பேர் பலி  

தெலுங்கானாவில் சனிக்கிழமையன்று நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள நெரேடுசர்லாவைச் சேர்ந்த ஒடு குடும்பம், ஆந்திரப்பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு தர்காவிலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  

அப்போது ஹைதராபாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சரகொண்டா மண்டலத்தில் உள்ள துர்கலபள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கவுஸ் கான் (55), சாதிக் (55), ஃபர்ஹானா (45), ரூஷன் (24) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  

இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கல்வக்குருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;