states

img

“பிரதமர் மோடி தப்பிக்க முடியாது

மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரம் தொடங்கி 175 நாள்களாகி விட்ட நிலை யில், இந்த இனக்கலவர பிரச்சனைக்கு  பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடி யாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது  தொடர்பாக தனது டுவிட்டர்  எக்ஸ் வலைதளத்தில் வெளி யிட்ட வீடியோவில், “மணிப்பூ ரில் பாஜக எம்எல்ஏக்கள் பெரும்  பான்மையாக இருக்கும்  நிலையில், அவர்களையும் முதல்வரையும் இது வரை பிரதமர் மோடி அழைத்து ஏன் பேசவில்லை?  மணிப்பூரை சேர்ந்த ஒன்றிய வெளியுறவு துறை  இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அவரது மாநில பிரச்சனைக் காக ஏன் பிரதமரை சந்திக்க முடியவில்லை? அனைத்து விவகாரங்கள் குறித்து பேசும் பிரதமர் மோடியால் மணிப்பூர் பிரச்சனை குறித்து 4-5 நிமிசங்களுக்கு மேல் ஏன் பேச முடி யவில்லை? மணிப்பூரின் பல்வேறு சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்ட மாநில முதல்வரை ஏன் இது வரையில் மாற்றவில்லை? மணிப்பூர் கலவரம் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி தலையிடா மல் அந்த மாநிலத்தை அப்படியே கைவிட்டதை நாட்டு மக்களும், சமாதானம் ஏற்பட வேண்டும்  என்று நினைப்பவர்களும் கவனித்து கொண்டிருக் கன்றனர். இந்த பிரச்சனைக்கு பொறுப்பேற்பதில் இருந்து  பிரதமர் மோடி தப்பிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.