புதுதில்லி இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மக்களவை தொகுதி கள், மாநிலங்களின் சட்டமன்றத் தொகு திகள் மற்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நீண்ட காலமாக மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலை மையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. வரும் 20ஆம் தேதியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைய உள்ள தால், இந்த மசோதாவை அவசர அவசர மாக தாக்கல் செய்ய ஒன்றிய அரசு ஆர்வம் காட்டியது. அதன்படி “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை (டிச. 16) மக்களவை யில் தாக்கல் செய்ய உள்ளதாக மக்கள வைச் செயலகம் மூலம் செய்திகள் வெளி யாகின. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசு களைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநில சட்டமன்றங்களில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும் எனக் கூறி எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் சாத்தியமில் லாதது; மோடி அரசு முதலில் மசோதா வை தாக்கல் செய்யட்டும். பிறகு பார்க்க லாம் என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் சவால் விட்டன. இத்தகைய சூழலில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய மோடி அரசு திங்கள்கிழமை “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்ட மசோதா தாக்கல் செய்ய வில்லை. கடைசி நாளில் தாக்கலா? “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா வில் இரண்டு திருத்தங்கள் மேற்கொள்வ தற்காக மசோதா நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஒன்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82 ஏ-வில் புதியதாக பிரிவு 2-ஐ சேர்க்க வேண்டும். இது சட்ட மன்ற மற்றும் மக்களவை பதவி காலங்க ளை ஒரே நேரத்தில் நிறைவு செய்ய வழி வகுக்கிறது. அதே போல சட்டப்பிரிவு 83 (2)-ல் மேலும் புதியதாக இரண்டு பிரிவு களை சேர்க்கவும் இந்த மசோதா வழி வகுக்கிறது. இது சட்டமன்றம் மற்றும் மக்களவையை கலைக்க வழிவகுக்கி றது. மேலும் புதுச்சேரி, தில்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொடர்புடைய சட்டங்களை திருத்த வழி வகுக்கிறது. இதன் அடிப்படையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் எனக் கூறி மோடி அரசு மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்யவில்லை என்றும், இந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்றும் மக்கள வைச் செயலக வட்டாரங்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன.