பிஆர்எஸ் உண்ணாவிரதத்தில் மோடிக்கு யெச்சூரி கேள்வி மகளிர் மசோதா எங்கே? புதுதில்லி, மார்ச் 11 - சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்க ளுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடன டியாக நிறைவேற்றக் கோரி பாரத் ராஷ்டிர சமிதி (BRS) சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தெலுங்கானா முதல்வரின் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, “அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதற்கு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்வது முக்கியமானது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை அறிமுகம் செய்து நிறைவேற்ற வேண்டும். நாடாளு மன்றத்துக்குள் கடந்த 2014-இல் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக நுழையும்போது, ‘மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எனது அரசு முன்னுரிமை அளிக் கும்’ என்று உறுதியளித்தார். ஆனால், அவர் இந்த உறு தியை அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.