புதுதில்லி, அக்.20- 2016-2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், காலநிலை மாற்றத் தால் ஏற்பட்ட புயல்,, மழை, வெள்ளம் போன்ற நிகழ்வுகளால் 3.6 கோடி ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் 375 கோடி டாலர் இழந்துள்ளனர். 2021- ஆம் ஆண்டில் கடுமையான வெப்பம் காரணமாக சேவை, உற்பத்தி, விவசாயம் மற்றும் கட்டுமானத் துறை களில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக ரூ.1,315 கோடி வருமானத்தை இழந்துள்ளனர். கடுமையான வெப்பம் காரணமாக தோராயமாக 16ஆயிரம் கோடி மணி நேரம் உழைப்பை இழந்துள்ளனர். இது 1990-1999-ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 39 சதவீதம் அதிகம். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் மழைப்பொழிவு முறை மாறியுள்ளது, இது விவசாயம், வனம், மற்றும் மீன்பிடி போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச நிறுவனங்களின் கூட்டாண்மை மூலம் தொகுக்கப்பட்ட காலநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை 2022 தெரிவித்துள்ளது.