states

img

வெற்றுப் பெருமிதத்தால் மக்களுக்கு என்ன லாபம்?

மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் உள்ள பத்திரப் பதிவுத் துறையை ஒரே நாடு, ஒரே பதிவின் மூலம் ஒன்றிய அரசு வரம்பின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற அச்சமும், எல்ஐசி பங்குகளின் விற்பனை உள்ளிட்ட இது போன்ற அறிவிப்புகள் மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையுமே ஏற்படுத்தும்.

2022-23 ஒன்றிய பட்ஜெட் டில் சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர் வழித்தடங்கள், பொதுப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து போன்ற நாட்டின் முக்கிய ஏழு பெரிய கட்டமைப்புத் திட்டங் களை உள்ளடக்கி பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் கொண்டு வந்திருப்பதும்; பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தி டும் வகையில் மூன்று முக்கிய திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதும், நடப்பு ஆண்டில் 25000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் மேம் படுத்தப்படும்; நாடு முழுவதும் 2000 கி.மீ இரயில் வழித்தடங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்; 5700 கோடி ரூபாய் செல வில் புதிதாக ஒன்பது லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் வேளாண் திட்டங்கள் அறிமுகம்; கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும்,  மக்களின் உடல் நலனை உறுதிப்படுத்தும் சிறுதானிய வகைகளை ஊக்குவிக்கும் வகை யில் 2022-23 ஆம் ஆண்டினை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதும், வெளிநாடு செல்வோருக்கு சிப் வடிவிலான இ-பாஸ் போர்ட் இவ்வாண்டே அறிமுகப்படுத்தப் படும் போன்ற அறிவிப்புகள் மட்டுமே இந்த பட்ஜெட்டில் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மிகுந்த ஏமாற்றம்

இருப்பினும், கொரோனா தொற்று இன் னும் முழுமையாக நாட்டை விட்டு அகலாத நிலையிலும், ஒன்றிய சுகாதாரத் துறை நாடு  முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழு மையாகத் தளர்த்தாத நிலையிலும், அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சலு கைகளை தாராளமாக அளித்திடும் வகை யில் ஒன்றிய பட்ஜெட் 2022-23 இருக்கும் என தொழில் வணிகத் துறையினர், வேளாண் துறையினர் மற்றும் பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால், மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க சிறப் பம்சங்கள் தொழில் வணிகத் துறையின ருக்கு ஏதும் அறிவிக்காதது மிகுந்த அதிர்ச்சி யையும், ஏமாற்றத்தையுமே அளித்துள்ளது. குறிப்பாக, தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படலாம் என்று எதிர்ப்பார்த்  திருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டும் தனிநபர் வருமான வரி வரம்பில் எந்த வித மாற்றமும் பட்ஜெட்டில் செய்யப்படாததால் மாத ஊதியம் பெறு வோர், நடுத்தர வர்க்கத்தினர், சிறு தொழில் செய்வோர் ஆகியோருக்கு மிகுந்த ஏமாற் றத்தை அளித்துள்ளது.

ஜிஎஸ்டி எனும் பெரும்கொள்ளை

இந்த பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி-யில் பல் வேறு பொருட்களுக்கு குறிப்பாக வணிகச் சின்னம் கொண்ட உணவுப் பொருட்கள் மற் றும் காலணி உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படா மல் உள்ளதும், பொதுவாக தொழில் வணி கத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான ஜி.எஸ்.டி வரிமுறை யில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல் களுக்கு தீர்வு காண்பது மற்றும் வரிவிகி தத்தை எளிமையாக்குவது குறித்து இந்த பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்பதும் ஏமாற்றமே. இதற்கிடையே அனைத்துப் பொருட்களின் விலைகளும், கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த மாத (ஜனவரி) ஜி.எஸ்.டி வரி வருவாய் 1,40,986 கோடி வசூலாகியுள்ளது என்று ஒன்றிய நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்வதில் எவ்வித நியாயமும் இல்லை. நடைமுறைக்கு வருமா? வராதா? மேலும் பல்வேறு முக்கிய கட்டமைப்பு களுக்கு இந்த நிதியாண்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைச் சொல்லாமல், இனி வரும் மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; அடுத்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணைய வழி சேவை வழங்கப்படும் என்ற இது போன்ற அறிவிப்புகள் இத்திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருமா, வராதா என்ற சந்தே கத்தையே எழுப்புகிறது.

யாருக்கு நன்மை?

பல்வேறு தரப்பினரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டப் பட்டுள்ள டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை யை ஒழிக்க வேண்டும் என பெரும்பாலா னோர் வலியுறுத்தி வந்த நிலையில் பாரத ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் கரன்சியை இந்தாண்டு அறிமுகப்படுத்தும் என்றும், தற்போது பயன்பாட்டில் உள்ள கிரிப்டோ கரன்சிகளின் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பும், சாமா னிய மக்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை. அனைத்து அரசுத் துறைகளையும் தனி யார்மயமாக்கிட ஒன்றிய அரசின் முயற்சி களுக்கு ஏற்கனவே பல்வேறு தரப்பிடமிருந் தும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் குறிப் பாக தொலைத் தொடர்பு துறை (BSNL) நலிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தற்போதைய சூழலில் தொலைத் தொடர்பு துறையில் 5G அலைக்கற்றைக்கு ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பு முரண்பாடாக உள்ளது.  மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ்  உள்ள பத்திரப் பதிவுத் துறையை ஒரே நாடு, ஒரே பதிவின் மூலம் ஒன்றிய அரசு வரம்பின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற அச்சமும், எல்ஐசி பங்குகளின் விற்பனை உள்ளிட்ட இது போன்ற அறிவிப்புகள் மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையுமே ஏற்படுத்தும்.

தமிழகம் புறக்கணிப்பு

குறிப்பாக, தென் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத தும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசி யல் கட்சியினர் நாடாளுமன்றம் வரை தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நைபர்) அமைக்க வேண்டும், மெட்ரோ ரயில் திட்டம், மதுரை யில் பஸ்போர்ட் திட்டம், எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படுவதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் ஏதும் இல்லா ததும் ஒட்டு மொத்த தென் தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது.