states

img

ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரிசெய்திட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

புதுதில்லி, பிப்.7- மக்கள் மத்தியில் காணப்  படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரி செய்திட அரசு எடுத்த நட வடிக்கைகள் என்ன என்று மக்க ளவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பி னார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. மக்களவையில் கேள்வி  நேரத்தின்போது, பி.ஆர்.நட ராஜன், ‘‘இந்திய மாவட்டங்க ளில் கடுமையான ஊட்டச்சத்து  குறைபாட்டு நிலை’’ என்ற தலைப்  பில், மேற்கொள்ளப்பட்ட மாவட்ட நிலையிலான ஆய்வு,  2016 மற்றும் 2021-க்கு இடையி லான காலத்தில் ஏறக்குறைய  சரிபாதி இந்திய மாவட்டங்களில்,  கடுமையான ஊட்டச்சத்து குறை பாடு உள்ளதாக காட்டுகிறதா, ஆம் எனில், அதன் காரணங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதில ளித்த ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் வருமாறு:

‘‘இந்திய மாவட்டங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறை பாட்டு நிலை’’ என்ற தலைப்பி லான அறிக்கை ஒரு வெளிப்படை யான இணையத்தில் கிடைக்கக் கூடிய அறிக்கையாகும். இந்த அறிக்கையாளர்கள், குறிப்பிட்ட முடிவுகளை எட்டுவதற்கு எந்த விதமான முறைகளை பின்பற்றி னார்கள் என்பது ஆய்வு செய்  யப்படவில்லை. இருப்பினும், சுகாதாரம் மற்றும் குடும்பநல  அமைச்சகத்தால் மேற்கொள்  ளப்பட்ட, தேசிய குடும்பநல ஆய்வுகளின் கீழ், 5 வயதுக்கும் கீழான, குறையெடையுள்ள, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, மற்றும் கடுமையான ஊட்டச்  சத்து குறைபாடு உள்ள குழந்தை களின் எண்ணிக்கையின் மதிப் பீட்டை பெறலாம். சமூக பொருளாதார கார ணங்களால் போதுமான உணவு  உட்கொள்ளாமை, சமத்துவமின்மை மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள், மோசமான சுகாதார நிலை மற்  றும் சுற்றுச்சூழல் நிலைப்பாடு கள் ஆகியவை உள்ளிட்ட பொது வான காரணிகளால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு என்பது  ஒரு சிக்கலான மற்றும் பன்முகத்  தன்மை கொண்ட பிரச்சனை யாகும்.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது இறப்பிற்கான நேரடி கார ணம் இல்லை. ஒரு கோடி அள விலான குழந்தைகள் கடுமை யான ஊட்டச்சத்து குறைபாடு  உள்ளவர்கள் என குறிப்பிடுவதற்  கான, சரிபார்க்கப்பட்ட புள்ளி விப ரங்கள் ஏதுமில்லை. ஊட்டச்சத்து  குறியீடுகள் என்பவையான தரவு கள்,

தேசிய குடும்பநல ஆய்வின் மூலம் பெறப்படுபவை. சமீபத்திய 2019-2021-ஆம்  ஆண்டு தேசிய குடும்பநல ஆய்வு-5இன்படி, 5 வயதிற்கு  கீழுள்ள குழந்தைகளுக்கி டையே கடுமையான ஊட்டச் சத்து குறைபாடு என்பது, கடு மையான வளர்ச்சி குறைவு உள்ள குழந்தைகள், 15.1  விழுக்காடாகவும், கடுமையான  எடைக் குறைவு உள்ள குழந்தை கள் 10.6 விழுக்காடாகவும் இருக்  கிறது என்றும், ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சனைக்கு,  அரசு, அதிக முன்னுரிமை வழங்கி, அதனை எதிர்கொள்ள தீவிர முயற்சிகளை எடுக்கிறது. மானிய விலையில், தரமான உணவு  தானியங்களை, போதுமான அளவு கிடைப்பதை உறுதிப் படுத்துவதன் மூலம், குடும்ப அள வில், உணவு பாதுகாப்பு என்ற பிரச்சனையை எதிர்கொள்கிறது என்றும், மேலும், நுண்ணூட்ட சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை எதிர்கொள்ள இந் திய அரசு, மத்தியிலிருந்து ஆதர வளிக்கப்பட்ட முன்னோடித் திட்ட மான ‘‘அரிசியை பலப்படுத்து தல் மற்றும் அதனை பொது விநி யோகத் திட்டத்தின் கீழ் விநி யோகித்தல்’’ என்ற திட்டத்திற்கு,  14-02-2019 அன்று, 2019-2020இல்  தொடங்கி மூன்று ஆண்டு களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், நுண்ணூட்டச் சத்துக் களான இரும்பு, போஃலிக் ஆசிட்  மற்றும் வைட்டமின் பி.12  போன்றவற்றின் பற்றாக்குறை யால், மகளிர் மற்றும் குழந்தை களுக்கிடையே ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் இரத்த  சோகையை எதிர்கொள்ள, அரசு அங்கன்வாடி சேவைகளின் துணை ஊட்டச்சத்து திட்டங்களின் கீழ்,  பலப்படுத்தப்பட்ட அரிசியை ஒதுக்கீடு செய்து அளித்தது என்றும், மேலும், தேசிய உணவு  பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது  விநியோகத் திட்டம் முழுவதி லும், பலப்படுத்தப்பட்ட அரி சியை வழங்க ஒப்புதல் அளித்த தோடு, இந்திய அரசின் பிற நலத்  திட்டங்களிலும், அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களுக்கு கட்டம் கட்டமாக 2024-ஆம் ஆண்டிற்குள் இவ் வகை வழங்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறி யுள்ளார்.

மேலும், எந்தவொரு ஏழை,  பாதிக்கப்படக் கூடியவர்கள் அல்லது தேவைப்படும் பயனாளி கள்/ பயனாளிக் குடும்பங்கள், யாருமே உணவு தானியம் கிடைக்காமல், பெருந்தொற்றுக் காலத்தில், பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது என்பதை உறுதிப படுத்தும் விதமாக கோவிட் பெருந்தொற்று காலத்தில், பிர தமர் கரீப் கல்யாண் யோஜனா  திட்டத்தின் மூலம் ரேசன் வாயி லாக 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டன என்றும் கூறியுள்ளார்.  (ந.நி.)