states

img

சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக மகாராஷ்டிராவில் வன்முறை

மும்பை பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் கோ லாப்பூரில் உள்ளது விஷால் காட் கோட்டை. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டையின் அடிவாரப் பகுதியில் சுற்றுலா வரு மானத்தை நம்பி  பொதுமக்கள் சின்னஞ்சிறிய வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், “விஷால் காட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கம்” என்ற அமைப்பை நடத்தி வரும் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி யின் 13ஆவது நேரடி வழித்தோன் றலான கோலாப்பூரின் ராஜர்ஷி சத்ரபதி ஷாஹுவின் கொள்ளுப் பேரன் சம்பாஜி ராஜே, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜூலை 14 அன்று விஷால்காட் கோட்டை க்கு வர வேண்டும் என தனது ஆதர வாளர்களுக்கு உத்தரவிட்டார். ஜூலை 13 அன்று இரவு முதலே சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்க ளும், இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்களும் கோட்டை நுழை வாயிலில் முகாமிட்டனர். ஜூலை 14 அன்று காலை சம்பாஜி ராஜே ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் விஷால் காட் கோட்டை யின் அடிவாரத்தில் வசிக்கும் உள்ளூர் மக்களிடம்,”நீங்கள் சட்ட விரோத இடத்தில் வசிக்கிறீர்கள். உடனடியாக இந்த வீட்டை காலி செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் வீடுகள் இடிக்கப்படும்” என மிரட்டியுள்ளனர். ஆனால் உள்ளூர்வாசிகள்,”எங்களை வெளியேற சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் உள் ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தி யும், வீடுகளுக்கு தீ வைத்தும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர் கள், இந்துத்துவா குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். மசூதி மீதும் தாக்குதல் தொடர்ந்து கோட்டையில் உள்ள ரகுமான் மாலிக் தர்கா மீதும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர் கள், இந்துத்துவா குண்டர்கள் கற் களை வீசியும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கியும், மசூதிக்கு வெளியே “ஜெய் ஸ்ரீ ராம்” என்று  கோஷமிட்டும் தாக்குதல் தொடுத்த னர். இதனால் முஸ்லிம் மக்கள் வன் முறையாளர்களை எதிர்கொள்ள முயற்சித்ததால் மோதல் வெடித் தது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள காஜாபூர் பகுதிக்கும் வன் முறை பரவிய நிலையில், அப்பகு தியில் உள்ள முஸ்லிம் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டும்,  தீ வைத்து கொளுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்ட நிலையில், இந்த மோதலில் பல போலீசாரும் காய மடைந்ததாக தகவல் வெளியாகி யுள்ளது.  இந்த வன்முறை சம்பவம் தொ டர்பாக கோலாப்பூர் காவல்துறை யினர் இதுவரை 21 பேரை கைது  செய்துள்ளனர். 500 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் எப்ஐ ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளன.  சம்பாஜி ராஜே பாஜகவைச் சேர்ந்தவர் விஷால் காட் கோட்டை மசூதி மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட சம்பாஜி ராஜே மீது மகாராஷ்டிரா போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. காரணம் முன் னாள் மாநிலங்களவை எம்.பி.யான சம்பாஜி ராஜே பாஜகவின் மூத்த தலைவர் ஆவார். சீட் கொடுக்காத அதிருப்தியில் பாஜ கவை விட்டு விலகியதாக கூறப் பட்டாலும், அவர் இன்னும் பாஜக வுடன் நேரடி தொடர்பில் தான் உள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதமே உள்ள நிலையில், சம்பாஜி ராஜே மூலம் விஷால் காட் கோட்டை மசூதி மீது தாக்குதல் நடத்தி பாஜக வகுப்பு வாத அரசியலை தொடங்கி யுள்ளது அம்பலமாகியுள்ளது.