states

img

பொய் குற்றம்சாட்டி முஸ்லீம் இளைஞரை அடித்துக் கொன்ற இந்துத்துவா கும்பல்

கந்த்வா, ஏப். 13- பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள்  மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருடியதாக பொய் குற்றம்சாட்டி முஸ்லீம் இளைஞரை இந்துத் துவா கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. கந்த்வா அருகே உள்ள சாய்கோன் தேவி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் பிரோஸ். இவர் கடந்த ஞாயிறன்று சாய்கோன் தேவி அருகே உள்ள வாய்க்கா லில் படுகாயத்துடன் மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப் பட்ட பொழுதிலும் பிரோஸ் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசா ரணையில் பிரோஸ் கொண்டைக்கடலை திருடும்போது பிடிபட்டதாகவும், சந்தே கத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட தாக பெயரளவில் கூறினர். ஆனால் உண்மை நிலவரத்தை உறவினர்கள் மூலமாக மீடியா வெளியிட்டது. பிரோஸின் உறவினர்களில் ஒருவரான மக்தூப், மீடியாவிற்கு அளித்த பேட்டியில்,”கந்த்வாவில் உள்ள சுர்கான் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சாட்டர் படேல். இவர் பிரோஸை அழைத்து விசாரித்துள்ளார். பிரோஸ் ஒரு முஸ்லீம் என்பதை தெரிந்ததும் தனது குண்டர்களை வைத்து இரக்கமின்றி கத்தி, இரும்பு கம்பிகளை வைத்து தாக்க  உத்தரவிட்டுள்ளார். இந்துத்துவா குண்டர் களின் இந்த தாக்குதலில் ஷேக் பிரோஸ் மயங்கினார். பின்னர் கால்வாயில் பிரோஸ் வீசப்பட்டுள்ளார்” எனக் கூறினார்.

சடலத்துடன் போராட்டம்

பெற்றோர்கள், உறவினர்கள்  ஷேக் பிரோஸின் சடலத்தை மொகத் காவல் நிலை யம் முன் வைத்து போராட்டம் நடத்தினர். பிரோஸின் தாய்,”தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை அவரது இறுதிச் சடங்குகளை செய்ய மாட்டோம்” எனக் கண்ணீருடன் கூறி போராட்டக்களத்தில் துடித்தார். பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்துக்குப் பின் ஷேக் பிரோஸின் உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீ சார் ஏற்பாடு செய்தனர்.

மேலும் ஒரு சம்பவம்

இதே கந்த்வா மாவட்டத்தில் அத்னான் மற்றும் அப்சல் என்ற முஸ்லிம் இளை ஞர்கள் இருவரும் தங்கள் வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கிற்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில்  4-5 பேர்  கொண்ட இந்துத்துவா கும்பல் வழிமறித்து இரண்டு இளைஞர்களையும் தாக்கி கண்க ளில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். மேலும் தாக்குதல் நடத்த “மாரோ மாரோ (அவர்களைத் தாக்குங்கள்)” என்று உள்ளூர் மக்களை இந்துத்துவா கும்பல் அழைத்துள்ளது. அதற்குள் முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் வாகனத்துடன் தப்பித்தனர். இதுதொடர்பாக 2 பேரும்  போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட 5 ‘சிறார்களை’ கைது செய்துள்ள தாக கூறப்படுகிறது. 

கலவர பூமியாக மாறும் கந்த்வா

கந்த்வா பகுதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முஸ்லீம் மக்கள் மீது  தாக்குதல் நடத்தும் கலவர பூமியாக மாறி  வருகிறது. கடந்த 2 மாத காலமாக கந்த்வா  பகுதியில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரண்டு மாதங் களுக்கு முன்பு மசூதிக்குச் சென்று கொண்டிருந்த இமாம் ஹபீஸ் ஹுசெபா வை 3 பேர் கொண்ட இந்துத்துவா கும்பல் வழிமறித்து  அவரது கண்களில் மிளகாய் பொடியை வீசி அவரது மார்பில் கத்தியைக் கொண்டு சரமாரியாக வெட்டியது. தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இமாம் உயிர்பிழைத்தார். 

போலீசார் கண்டுகொள்வதில்லை

முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் மீது  தாக்குதல் நடத்துவதாக புகார் கூறி னால், சம்பவம் நடந்த பகுதியில் பெயரள வுக்கு விசாரணைக்குச் சென்று, நீங்கள் திரு டியதால்தான் அவர்கள் உங்களைத் தாக்கி யுள்ளனர் என்று புகார் கொடுத்த முஸ்லீம் இளைஞர்களையே கைது செய்கின்றனர். முஸ்லீம் இளைஞர்களின் புகார்களை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்ப தால்தான் இந்துத்துவா அமைப்பினர் நாளுக்குநாள் முஸ்லீம்  மக்களுக்கு எதி ராக தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.