states

குஷ்பு வேறு மொழி பேசுபவர் வானதி சீனிவாசன் சப்பைக்கட்டு

சென்னை, மார்ச் 14- மகளிர் உரிமைத் தொகையை நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கொச்சைப்படுத்தி பேசினார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன்,“குஷ்பு வேறு மொழி பேசுபவர் என்பதால் அர்த்தம் புரியாமல் கூறியிருப்பார். அவரது வார்த்தையில் குறை சொல்ல ஏதும் இல்லை” என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார். இதே போல, புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் மகளிர்  உரிமைத் தொகை தொடர்பான குஷ்பு கருத்து குறித்து அம்மாநில செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், “குஷ்பு தவறாக சொல்லி யிருக்கமாட்டார். உள்நோக்கத்துடன் சொல்லி யிருக்கவும் வாய்ப்பில்லை. மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்குப் பயன்படுகிறது. அரசு அவர்களை மதித்துத் தான் கொடுக்கிறது”என்று சமாளித்துள்ளார்.