states

img

மும்பை தாக்குதல் தொடர்புடையவரை நாடு கடத்த அமெரிக்கா ஒப்புதல்

மும்பை தாக்குதலில் தொடர்பு டைய முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.  கடந்த 2008 நவம்பர் 26 அன்று கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்த்தவர்கள் தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர் கள் உட்பட 166 அப்பாவி மக்கள் படு கொலையானார்கள். 300 க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மட்டும் பாதுகாப்பு படை யினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு பல  கட்ட விசாரணைகளுக்கு பின் தூக்கி லிடப்பட்டார். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீக மாகக் கொண்ட பயங்கரவாதி தஹாவூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009-இல் பிடிபட்டார். மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிர வாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழில் அதிபர் ராணா சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இத்தாக்குதலில் முக்கிய குற்ற வாளியாகச் சந்தேகிக்கப்படும் அமெ ரிக்கச் சிறையில் உள்ள பாகிஸ்தான் - கனடா தொழிலதிபரான தஹாவூர் ராணா வை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசா ரணை நடத்த ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந் நிலையில் தான் அமெரிக்க உச்ச நீதி மன்றம் இதற்கான ஒப்புதலை வழங்கி யுள்ளது.