வாரணாசி, மார்ச் 5- உத்தரப் பிரதேசத்தில் ஆசம்கர், மௌ, ஜான்பூர், காஜி பூர், சந்தோலி, வாரணாசி, மிர்சா பூர், பதோஹி மற்றும் சோன் பத்ரா உள்ளிட்ட 9 மாவட்டங்க ளில் மொத்தமுள்ள 54 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர் தல் நடைபெறுகிறது. தேர்தலின் ஆரம்பம் முதலே, பிரதமர் மோடி உ.பி. மாநிலத் தில்தான் முகாமிட்டுள்ளார் என் றாலும், நிலைமை பாஜகவுக்கு சாதக மாக இல்லை என்ற அறிக்கை களால், உ.பி.யை விட்டு வர அவருக்கு மனமில்லை. இவற் றில் வாரணாசி, பிரதமர் நரேந் திர மோடியின் சொந்தத் தொகுதி என்ற நிலையில், அங்கு தோற் றுப்போனால், அது தமக்கு அவ மானம் என்று, வாரணாசியையே சுற்றிச் சுற்றி வருகிறார். அந்த வகையில், வெள்ளிக் கிழமையன்று வாரணாசியில் உள்ள மால்தாஹியா பகுதியில் சாலைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காசி விஸ்வ நாதர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
அப்போது, கோவி லில் இருந்த உடுக்கையை, பக் தர்கள் மற்றும் கட்சியினர் முன்னி லையில் வேகமாக அடித்து வேடிக்கை காட்டினார். பின்னர், பரேகா அரசு தங் கும் விடுதியில் இரவு உணவை முடித்த பிரதமர் மோடி, திடீ ரென மீண்டும் வெளியில் கிளம்பி, வாரணாசி ராணுவக் குடியிருப்பு பகுதியிலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று அங்குள்ள பயணிகளிடம் பேசி னார். கங்கையின் கடைசிக் கரை யான கிர்கியா காட்டிற்கு சென்ற அவர், அங்கு நீண்டநேரம் அமர்ந்து, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் உரை யாடினார். அங்கிருந்து தனது இருப்பிடத்திற்கு திரும்பும் வழி யில் திடீரென ஒரு கடையில் வாக னத்தை நிறுத்தி, தெருக்கடை யில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி, அப்படியே காலார நடந்தே சென்று பீடா வாங்கியும் மென்றார். உ.பி. வாக்காளர் களை கவர்வதற்கான கடைசிக் கட்ட முயற்சியாக மோடியின் இந்த நடவடிக்கைகள் அனைத் தும் இருந்தன.