states

img

தேடல் குழுக்களை மாநிலங்கள் அமைக்கலாம் : சட்டத்தை திருத்துகிறது யூஜிசி

புதுதில்லி, அக்.27- தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமன வழக்கில் துணை வேந்தர்களை தேர்வு செய்ய தேடல் குழு  அமைக்க பல்கலைக்கழகங்களுக்கு உரிமை வழங்கி யூஜிசி செய்த சட்ட  திருத்தத்தை உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. யூஜிசி விதிமுறைகளின் 2013 திருத்தத் தின் பிரிவு 7.3.0, தேடல் குழுக்களை அமைக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு  என்று வழங்குகிறது. ‘சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டம் அல்லது விதிமுறைகளின்படி தேடல் குழுக்கள் அமைக்கப்படலாம்’ என திருத்தத்தில் கூறப் பட்டுள்ளது. தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2015இன் கீழ் அமைக்கப்பட்ட தேடல் குழுதான் துணைவேந்தரை பரிந்துரைக் கிறது. யூஜிசி விதிமுறைகளின் திருத்தம்,  அதற்கான உரிமையை வழங்கியுள்ளது. இந்த விவரம் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனினும், தீர்ப்பில் இந்த சட்டப் பிரச்சனை குறித்த தனது நிலைப்பாட்டை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. யூஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்படாத தேடல் குழுவின் பரிந்துரையின் பேரில் நடந்த துணைவேந்தர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேடல் குழுவால் மூன்று அல்லது ஐந்து பேர் கொண்ட குழுவை ஒருமனதாக அமைக்க முடியாவிட்டால், அடுத்த கட்டம்  என்ன என்பது குறித்து யூஜிசி விதிமுறை  தெளிவாக இல்லை.  இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தொழில்நுட்பப் பல்கலைக் கழகச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, ‘தேடல் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பெயரை வேந்தருக்கு பரிந்துரைக்கலாம்’.