புதுதில்லி,ஜுலை 23 - மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 6 ஆயிரம் பேராசிரி யர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு, உயர் கல்வி நிலையங்களை சீரழிக் கும் போக்கை கல்வியாளர்கள், மாணவர்கள் கண்டித்துள்ளனர். நாட்டின் மத்திய பல்கலைக்கழ கங்களில் உள்ள 18,956 பணியிடங் களில் மூன்றில் ஒரு பங்கான 6,028 பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய உயர் கல்வித்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக சமூக செயற் பாட்டாளர் சந்திரசேகர் கௌர் எழுப் பிய கேள்வியால் இது அம்பலமாகி யுள்ளது. ஒரு நாட்டின் உயர்கல்வியை மேம் படுத்தி அறிவியல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதே நட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்.இந்த வளர்ச்சி பணியை செய்வதில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் புதிய பாடத்திட்டங்கள்,நவீன வகுப்பறைகள் மற்றும் பெண்கள்,சிறுபான்மையினர் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஆக்கப் பூர்வமான கல்விக் கொள்கைகளை வகுப்பதே நாட்டின் கல்வித்துறையை முறையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். ஆனால் இந்தியா முழுவதும் கல்வியையும் கல்வி நிலையங்களை யும் ஒன்றிய பாஜக அரசு நிர்மூல மாக்கும் வேலையில் ஈடுபட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கிறது.மேலும் கல்வி நிலையங்களை சீரழிப்பதின் ஒரு பகுதியாக மத்திய பல்கலைக்கழகங் களில் மூன்றில் ஒரு பங்கு பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் காலி யாக விட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பல்கலை.யில் 100 சதவீதம் காலிப்பணியிடம்
மாநில வாரியாக அதிகபட்சமாக ஒடிசா, திரிபுரா, மத்திய பிரதேசத்தில் உள்ள டாக்டர் ஹர்ஸிங் கௌர் மத்திய பல்கலைக்கழகங்களிலும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்திலும் 50 சத வீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதே வேளையில் மிசோரம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 15 சதவீதத்திற்கும் குறைவான பணியிடங் களே காலியாக உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நிறு வப்பட்ட ஆந்திரா பல்கலைக்கழகத் தில் தற்போது வரை 100 சதவீத பணி யிடங்களும் காலியாகவேவிடப்பட்டுள் ளது என்ற அதிர்ச்சியான தகவலும் தெரி விக்கப்பட்டுள்ளது. சாதிவாரியான புள்ளி விவரங்களின் படி பார்த்தால் பொது பிரிவில் 20 சத வீதமும் பட்டியல் மற்றும் பழங்குடி பிரி வில் தலா 38 மற்றும் 45 சதவீத பணியிடங் களும் ஓபிசி பிரிவில் 44 சதவீத பணியிடங் களும் மாற்று திறனாளிகளு க்கான இட ஒதுக்கீட்டில் 58 சதவீதமும் நிரப்பப் படாமல் உள்ளது தெரிய வந்துள் ளது. இட ஒதுக்கீட்டின் படி போது மான ஆசிரியர்கள் பணியமர்த்தப்படா ததாலும் முறையான கல்வி முறை பின்பற்றப்படாததாலும் ஐஐடிக்களில் 19 ஆயிரம் மாணவர்கள் தோல்வி யடைந்துள்ளனர்.அது மட்டுமின்றி அங்கு சாதிய மத ஒடுக்குமுறைகள் தலை விரித்தாடுகின்றன.பிற்படுத்தப் பட்ட பட்டியல் & பழங்குடி பிரிவில் ஆசிரியர் பணியிடங்கள் முறை யாக நிரப்பப்படவில்லை,இது ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாண வர்களுக்கு கல்வி ரீதியாகவும் சமூக ரீதி யாகவும் பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதை பார்க்க முடி கிறது. தற்போது மத்திய பல்கலைக் கழகங்களில் உள்ள இந்த காலிப்பணி யிடங்களால் அங்கும் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு வழிவகுப்பதோடு அறிவியல் கல்வி வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்லும்.