ஆந்திராவில் ‘தேவுடு’ என்று மக்க ளால் அழைக்கப்பட்டு, கடவுளாக கொண்டா டப்பட்டவர் என்.டி. ராமாராவ். புகழ்பெற்ற நடிகரான அவர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவி 7 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துர்க்கியில் உள்ள அவரது சிலையை, சம்மட்டியால் அடித்து உடைக்க முயன்றதாக தற்போதைய ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டீஸ்வர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.