புதுதில்லி, டிச.25- உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நச்சு உணவு சாப்பிட்ட 15 சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்க மந்திரவாதி ஒருவரை அழைத் துள்ளது பள்ளி நிர்வாகம். பாதிக் கப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதி யை வரவழைத்து, ‘பேயோட்டுதல்’ நடத்தப்பட்டது. இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உ.பி அர சுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 21ஆம் தேதி தான் காட்சி ஊடகங்கள் ‘பேய் ஓட்டுதல்’ காட்சியுடன் செய்தி கொடுத்தன. பின்னர் குழந் தைகளை காவல்துறையினர் உள்ளூர் சுகாதார மையத் திற்கு அனுப்பி வைத்தனர். மஹோபா மாவட்டத்தில், ஒன்பது முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளி உணவை சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.