states

ஒடிசாவில் சரக்கு ரயில் ஏறியதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி!

புவனேஸ்வர், ஜூன் 8 - ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம்  பகானகா பஜார் ரயில் நிலையம் அருகே,  ஜூன் 2-ஆம் தேதி இரவு 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 288  பேர் உயிரிழந்தனர். உடல் நசுங்கிப் பலி யான பலரது உடல்களை இப்போது வரை அடையாளம் காண முடிய வில்லை. இந்தச் சம்பவம் மற்றும் அது  ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்தும் மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. ஆனால், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்கு பின்னர், நாடு முழு வதுமே பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் தடம்புரள்வதும், விபத்துக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 288 பேர் பலியான துயரம்  நிகழ்ந்த, அதே ஒடிசாவில் சுண்ணாம்புக் கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், திங்க ளன்று பார்கார் என்ற பகுதியில் தடம் புரண்டது. இதில், 5 பெட்டிகள் சேத மடைந்தன. அதேபோல, ஒடிசாவில் ஓடும் போது, செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து  புகை வெளியான சம்பவம், செவ்வாய ன்று அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதனன்றும் இன்ஜின் இல்லாத சரக்கு ரயில் ஏறியதில், 7 தொழி லாளர்கள் ஒடிசாவில் உடல் நசுங்கிப் பலியாகியுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சாலை  பகுதியில் உள்ள ரயில்வே நிலை யத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ரயில்  இன்ஜின் இல்லை. இதற்கிடையே, ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதி யருகே ரயில்வே பணிக்காக ஒப்பந்த  அடிப்படையில் சில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மழை மற்றும் இடி காரண மாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்டியின் அருகே சென்று ஒதுங்கியுள்ளனர். இந்நிலையில் மழை யின்போது காற்று பலமாக வீசியதில் சரக்கு ரயிலின் பெட்டிகள் அவர்கள் மீது  உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளி யிட்டிருக்கும் ரயில்வே வாரியம், இன்ஜின் இல்லாத சரக்கு ரயிலின் பெட்டிகள், வேகமான காற்று வீசிய தால் உருண்டன என்று தெரிவித்துள் ளது.  இந்நிலையில், சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவார ணம் வழங்கப்படும் என்று ஒடிசா  முதல்வர் நவீன் பட்நாயக் அறி வித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டம் போஜூதிக், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் ஷாபுரா பிடோனி, தமிழ்நாட்டில் திருச்சி, திருப்பத்தூர் என பல இடங்களில் ரயில் போக்குவரத்தானது, விபத்துக்களையும், விபத்து தவிர்ப்பையும் சந்தித்துள்ளன.

அசாமில் சரக்கு ரயில் தடம் புரண்டது

அசாம் மாநிலம் காம்ரூப்பில், 20 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் இருந்து காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள டெடெலியாவுக்கு 20 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிவந்த ரயிலானது அசாமில் போகோ அருகே சிங்ராவில் தண்ட வாளத்தில் சென்றுகொண்டிருந்தபோது தடம் புரண்டுள்ளது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட தற்கான காரணமும் கண்டறியப்பட வில்லை. சரக்கு ரயில் தடம் புரண்டதில் ரங்கியா-லும்டிங் பிரிவில் செல்லும் நான்கு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.