states

img

உத்தரப்பிரதேசத்தில் சோகம் ஆன்மீக நிகழ்ச்சி மேடை சரிந்து 7 பேர் பலி

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட் டத்தின் பராவுத் பகுதியில் ஜெயின் சமூகத்தினர் ஏற்பாடு செய்தி ருந்த “லட்டு திருவிழா” திங்களன்று நடை பெற்றது. 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நூற்றுக்க ணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பக்தர்களுக்காக அமைக்கப் பட்டிருந்த மூங்கில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். காயமடைந்த 50-க்கும் மேற் பட்டோர் பாக்பத் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமா கியுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.