states

கல்விச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் 87 பேராசிரியர்கள் எச்சரிக்கை

புதுதில்லி, ஆக. 19- 2019 மக்களவைத் தேர்தல் முறைகேடு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டது தொடர்பாக அசோகா பல்கலை. நிர்ப்பந்தத் தினால் பேராசிரியர்கள் 2 பேர் ராஜினாமா செய்தனர். இது கல்விச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என 87 பேராசிரியர்கள் பல்கலை., நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  2019 மக்களவைத் தேர்தலில் பாஜக  மிகப்பெரிய முறைகேட்டை அரங்கேற்றியதாக அசோகா பல்கலைக்கழ கத்தில் பணிபுரியும் பொருளாதார உதவிப் பேராசிரியரான சப்யசாச்சி தாஸ் “உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” என்ற பெயரில் 50 பக்கம் கொண்ட ஆய்வுக் கட்டுரையை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டு கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளார்.  இந்த ஆய்வுக்கட்டுரைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அசோகா பல்கலைக்கழகம், “எங்களது கல்வி இதழில் 2019 மக்களவைத் தேர்தல்  ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் எதுவும் வெளியிடப்பட வில்லை” என கூறி மழுப்பியது.  இந்நிலையில், சப்யசாச்சி தாஸ், கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக ஏற்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், தொடர்ந்து அசோகா பல்கலைக்கழக பொருளாதாரத் துறையின் மற்றொரு பேராசிரியர் புலப்ரே பாலகிருஷ்ணன், சப்யசாச்சி தாஸ்  ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினா மாவை இன்னும் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கவில்லை.

அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை புதன்கிழமை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், “சப்யசாச்சி தாஸ் ஆய்வின் தகுதிகளை ஆராய்வதற்கான செயல்பாட்டில் அசோகா  பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் தலையிடல் பேராசிரியர்களின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தக்கூடும்” என்று எச்சரித்தது. குழு அமைத்திடுக! இந்நிலையில், பேராசிரியர்கள் 2 பேர் ராஜினாமா செய்த விவகாரம், கல்வி சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என நயன்ஜோத் லஹிரி, புலப்ரே பாலகிருஷ்ணன், சைகத்  மஜும்தார் மற்றும் மாதவி மேனன் உட்பட 87 பேராசிரியர்கள்,  பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின்னஞ்சல் கடிதத்தில், “பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இந்த விஷயம் கையாளப்பட்டதாக நாங்கள் கருதியதாலும், பிரதாப் பானு மேத்தா வெளியேறிய பிறகு உருவாக்கப்பட்ட கல்வி  சுதந்திரத்திற்கான ஆவணம் எங்களிடம் இருந்ததாலும், அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழிகள் இருந்ததாலும் இந்தக் கடிதத்தை நாங்கள் எழுதுகிறோம். கல்விச் சுதந்திரம் பற்றிய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகள் மற்றும் சில டுவிட்களின் தோற்றம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. விரைவில் கல்விச் சுதந்திரத்திற்கான ஒரு குழுவை அமைப்பது நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  ஆக. 23 வரை அவகாசம் மேலும் அந்தக் கடிதத்தில் “தாஸ் எந்த கல்வி நடைமுறை யையும் மீறவில்லை. ஆராய்ச்சியை மதிப்பிடுவது தொடர்பாக ஆகஸ்ட் 23 வரை பல்கலைக்கழகத்திற்கு அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் சரியான நடவடிக்கை எடுக்க தவறினால் பேராசிரியர்கள் தங்கள் கற்பித்தல் கடமைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.