புதுதில்லி, நவ. 25 - “நாகலாந்திற்கு என தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு விவ காரத்தில் இந்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது” என நாகலாந்து தேசிய கவுன்சில் - ஐஸ்சக் முய்வா (NSCN--IM) பிரிவு தெரிவித்துள்ளது. 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாக லாந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் அமைப்பு, ‘நாகலிம்’ என்ற தனி நாடு, நாகர் இன மக்களுக்கு என ‘தனி தேசியக் கொடி’, ‘அரசியலமைப்பு’, ‘தனி பாஸ்போர்ட்’ என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. தனி அரசியலமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு, நாகலாந்து தேசிய சோசியலிஸ்ட் - ஐசக் முய்வா பிரிவுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய அரசு இதுவரை நடத்திய 80 கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில், தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு உள்ளிட்ட விவகாரத்தில் நாகர் அமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர் என கூறப்படுகிறது. “நாகா தேசியக் கொடி மக்களுடன் இணைக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான அம்சம்” என்றும், “கடவுள் கொடுத்த வரலாறு” என்றும் நாகலாந்து தேசிய கவுன்சில் அமைப்பு பேச்சுவார்த்தையில் தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது. இதற்குமுன் நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, நாகலாந்து தேசிய கவுன்சிலின் தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு கோரிக்கைகளை நிராகரித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக் கொடி, தனி அரசிய லமைப்பு பிரச்சனை தொடர்ந்து வரு கிறது. இந்நிலையிலேயே, “நாக லாந்திற்கு என தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு விவகாரத்தில் இந்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ள முடி யாது” என நாகலாந்து அமைப்பு கூறி யுள்ளது.