தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேச்சு
ஹைதராபாத், ஜன. 13 - பாஜக-வால் ஊட்டி வளர்க்கப் படும், வகுப்புவாத மற்றும் சாதியவாத வெறுப்பு அரசியலால், தலிபான்களின் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானைப் போல இந்தியாவும் மாறும் ஆபத்து உள்ளதாக பாரத் ராஷ்ட்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலம் மஹபூ பாத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கே. சந்திர சேகர் ராவ் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியிருப்பதாவது: சமுதாயம் பெரும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அனைவரின் நலனையும் பாதுகாப்பது முக்கியம். மாறாக, வகுப்புவாதம் மற்றும் சாதி வெறியை வளர்த்தால், மக்கள் பிளவு படுவார்கள். இந்த விஷயத்தை நாம் பின்பற்றினால் நாம் வாழும் இடமே நரகமாகிவிடும். அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி யில் எந்தச் சூழல் ஏற்பட்டு இருக்கிறதோ. அதேபோன்ற ஒரு சூழல் இங்கும் ஏற்படும். அது பயங்கர மான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். வெறுப்பு அரசியல் நாட்டின் உயிர்நாடியை எரித்து விடும். எனவே, இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட மற்றும் பாரபட்சம் இல்லாத அரசு அமைந்தால்தான் நாடும், மாநிலமும் முன்னேற்றம் அடையும். மாறாக, வகுப்புவாத மற்றும் சாதிய வெறுப்பு நாட்டை சீரழித்து விடும். நாட்டை தவ றான பாதைக்குக் கொண்டு செல்லும் தீய முயற்சிகள் இங்கு எப்படித் திட்ட மிட்டு கலவரம் நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஊரடங்கு, துப்பாக்கிச் சூடு தொடரும் சமூகத்தில் அமைதி எப்படி இருக்கும். நாடு குழப்பத்தை எதிர்கொண்டால், தலிபான்களைப் போல மாறினால், யார் தான் முதலீடு செய்ய வருவார்கள்? அதன் பின்னர் இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். இப்போதுள்ள தொழிற்சாலைகள் கூட இருக்காது. மூடிவிட்டுப் போய்விடுவார்கள்.
ஒன்றிய ஆட்சியாளர்களால் தெலுங்கானா மாநிலம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசானது, மாநில அரசுக்கு இணையாக செயல்பட தவறியதால், தெலுங்கானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர வேண்டிய அளவு வளரவில்லை. 2014-இல் தெலுங்கானா மாநிலம் உருவாகும்போது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 5 லட்சம் கோடி யாக இருந்தது. இன்று அது 11.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் திறமையற்ற கொள்கை களால், தெலுங்கானாவுக்கு மட்டும் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள் ளது. இந்த புள்ளிவிவரங்கள் பொரு ளாதார வல்லுநர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் சிஏஜி மூலம் கிடைத்தவை தான். தெலுங்கானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 14.50 லட்சம் கோடியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் ஒன்றிய அரசின் கொள்கை களால் ரூ.11.50 லட்சம் கோடியாகவே உள்ளது. இங்கு சிலர் (மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர்) பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு மக்களும் நம்பிவிட்டார்கள். ஆனால், மக்களுக்கு விடிவு எதுவும் கிடைக்க வில்லை. நாட்டில் தண்ணீர், மின்சாரத்திற்கு ஏராளமான வளங்கள் இருந்தாலும், ஒன்றிய அரசின் மோசமான கொள்கைகளால் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்சனையும் பற்றாக்குறையும் கூட இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை வரும் காலத்தில் நிச்சயம் மாறும். தெலுங்கானாவை முன்வைத்து இந்திய அரசியலே மாறப் போகிறது. நாடு முழுவதும் முன்னேறுவதற்கான வழியை தெலுங்கானா காட்ட விரும்புகிறது. இவ்வாறு கே. சந்திரசேகர ராவ் பேசியுள்ளார்.