பீகார் மாநிலத்தின் முக்கிய பிராந்திய கட்சி யான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி “ஜன் விஸ்வாஸ் யாத்திரை (மக் கள் நம்பிக்கை யாத்திரை)” என்ற பெயரில் மக்கள் சந் திப்பு இயக்கத்தை தொடங் கினார். ராகுல் காந்தியின் “இந் திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரையை” போன்று பேருந்து, நடைபயணம் என்ற நிகழ்வு டன் பிப்., 20-ஆம் தேதி பீகார் மாநிலத்தின் முக் கிய நகரான முசாபர்நகரில் தொடங்கிய இந்த யாத்திரை 33 மாவட்டங்களுக்கும் சென்று, பெல்ஹரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் மார்ச் 1 அன்று நிறைவு பெறுகிறது. இடதுசாரிகள் இந்நிலையில், தேஜஸ்வியின் யாத்திரை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகளும் இணைந்துள்ளன. வெள்ளி யன்று சஸ்ராமில் நடைபெற்ற யாத்திரை நிகழ் வில் ஆர்ஜேடி - இடதுசாரி கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே அணியாக கலந்து கொண்ட னர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பீகார் மக்கள் மத்தியில் தேஜஸ்வியின் யாத்திரைக்கு நாளுக்கு நாள் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் நிதிஷ் - பாஜக கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.