states

img

பப்பர் சோன் தீர்ப்பை தளர்த்தியது உச்சநீதிமன்றம்

புதுதில்லி, ஏப்.26- அதிர்வுதாங்கு மண்டல (பப்பர் சோன்)  தீர்ப்பை உச்சநீதிமன்றம் தளர்த்தியது. வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை அதிர்வுதாங்கு மண்டலங்களாக அறிவித்த முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் திருத்தியது. முழுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கையை பரிசீலித்து நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.