states

img

மகாதேவர் கோயில் தெருக்களே மக்களின் வாழ்வாதாரமாக மாறிய காட்சி

வைக்கம், ஏப். 2- வைக்கம் மகாதேவர் கோயிலின் நான்கு பக்கமும் சுற்றுச் சாலைகள் உள்  ளன. கிழக்கு மேற்கு வாயில்களில் இரண்டு ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.  இங்கு 70க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. பூ உள்ளிட்ட பூஜை சாமான்கள்  விற்பது என நூறுக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக வைக்கம் கோயில் பிர காரம் விளங்குகிறது. இதுகுறித்து வைக்கம் மகாதேவர்  கோயில் மேற்கு வாயில் சிஐடியு ஆட்டோ  ஓட்டுநர் சங்க நிர்வாகியும் சிபிஐஎம் லோக்  கல் கமிட்டி உறுப்பினருமான ஸ்ரீகாந்த் கூறு கையில், எங்களுக்குள் சாதி, மத வேறுபாடு கள் இல்லை. மறுமலர்ச்சி இயக்கம் எங்கள் மூதாதையர்களை ஒற்றுமைப்படுத்தியது. நாங்கள் அந்த ஒற்றுமையை பாதுகாத்து  வருகிறோம் என்றார். மேலும் அவர் கூறு கையில், இன்று நாங்கள் ஆட்டோ  ஓட்டு கிறோம் நூறாண்டுகளுக்கு முன்பு எங்கள் மூதாதையரை இந்த தெருக்களில் நடக்க விடாமல் ஓட்டினார்கள் என்றார். நகைச்  சுவையாக அவர் கூறினாலும் அது மூதா தையர் எதிர்கொண்ட தீண்டாமையும், பாகுபாடும் ஏற்படுத்திய வடுக்களை நினைவு கூருவதாக இருந்தது.    கோயிலின் வடக்கு வாசலில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் தீண்டாமையின் மையக்  கருவான நீலகண்டன் நம்பூதிரியின் வீடான இண்டம்துருத்தி மனை அமைந் துள்ளது. தற்போது இந்த இல்லம் தீண் டாமை கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டோரில்  ஒருபகுதியான மரம் ஏறும்  தொழிலாளர்களின் (செத்து தொழிலாளி)  சங்க அலுவலகமாக செங்கொடி இயக் கத்தின் கைகளில் உள்ளது. வைக்கம் நகராட்சியின் முன்னாள் தலைவரும் சங்  கத்தின் துணை தலைவருமான ரஞ்சித்  குமார் கூறுகையில், இந்த மனை அமைந்  துள்ள வடக்கு வீதியில் நடப்பதற்கு சுதந்தி ரம் மறுக்கப்பட்ட மக்களை தலை நிமிர்ந்து  நடக்கவும், சுதந்திரக்காற்றை சுவாசிக்க வும் வழிவகுத்தது செங்கொடி இயக்கம் என்றார். 300 க்கும் மேற்பட்ட மரம் ஏறும் தொழிலாளர்கள் இந்த அமைப்பின் கீழ் உள்ளதாக தெரிவித்தார்.