தைனிக் ஜாக்ரண், லக்னவ், 2 மார்ச் 2023, உத்தர் பிரதேஷ் தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளிகளை கொல்வது நடந்துகொண்டு உள்ளது மார்ச் 20க்கு முன்பாக இந்திக்காரர்கள் வெளியேற வேண்டுமென தமிழ்காரர்கள் சொல்கிறார்கள்
“இன்று பிற்பகல் 3:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்திக்கிறார்”, என்ற தகவல் திருப்பூர் பிஆர்ஓ அலுவலகம் மூலம் அனுப்பப் பட்டிருந்தது. தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு புறப்பட்டு செல்வதற்கு நேரம் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், திருப்பூர் சார் ஆட்சி யர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் அங்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமா னது தான். ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாந கர காவல் துணை ஆணையர் ஆகியோருடன் சேர்ந்து செய்தி யாளர்கள் சந்திப்பை நடத்தியது வழக்கமான ஒன்று அல்ல. இந்த சந்திப்பில், வட மாநிலங்களில் சமூக ஊடகங்களில், திருப்பூரில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக இரண்டு, மூன்று வீடியோக்கள் சித்தரித்து தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம், இங்கு அனைவருக்கும் பாதுகாப்பு உள்ளது, ஏதேனும் பிரச்சனை என்றால் தொடர்பு கொள்ளுங்கள்!, என்று தெரிவித்தனர். இத்துடன் மாநகர காவல் துணை ஆணையர், இதே விபரத்தை இந்தியிலும் பதிவு செய்து வீடியோ செய்தி வெளியிட்டார்.
இத்துடன் மாநகர காவல் துணை ஆணையர், இதே விபரத்தை இந்தியிலும் பதிவு செய்து வீடியோ செய்தி வெளியிட்டார். திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் பொங்கல் பண்டி கைக்கு முதல் நாள் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட சம்பவத்தை, கடந்த ஜனவரி மாத இறுதியில் இங்கே சிலர் சமூக ஊடகங்க ளில் பரப்ப, அதை இங்கிருக்கும் தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் வெளியிட திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதில் வட மாநிலத் தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களை தாக்குவதாக பரப்பப்பட்டது. உடனடியாக அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில், ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. சமூக ஊடகங்களில் பரப் பப்பட்டதற்கும், உண்மையில் நடைபெற்ற சம்பவத்தின் தன் மையை பற்றியும், அரசு நிர்வாகத்தின் தாமதமான நடவ டிக்கை பற்றியும் அந்த கூட்டறிக்கையில் விளக்கி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. காவல்துறையும் இருவரை கைது செய்தது. ஓரிரு நாட்களில் இந்த விஷயம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு எப்போதும் போல் திருப்பூர் தனது இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது.
அப்படி இருக்க ஏறத்தாழ ஒரு மாத காலம் கழித்து திடீரென மாவட்ட நிர்வாகம் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்தது. பிரச்சனை இங்கு இல்லை. வட மாநிலங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. இதனால்தான் இங்கு செய்தியாளர் சந்திப் பை நடத்தியதுடன், இந்தியிலும் வீடியோ வெளியிட்டுள்ளனர். தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவும் ட்விட்ட ரில் இது பற்றி பதிவு செய்துள்ளார். இது போக இந்திய ஏற்றுமதி யாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிர மணியம், இந்த சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பிரேம் அகர்வால் ஆகியோரும் இந்தியிலும், தமிழிலும் திருப்பூரில் அமைதி நிலவுவது பற்றியும், தவறான வதந்தியை பற்றியும் வீடியோ வெளியிட்டுள்ளனர். திருப்பூரில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர் கள் பலருக்கும் அவர்களது சொந்த ஊர்களில் இருந்து, உறவி னர்களிடமிருந்து அலைபேசியில் அழைத்து நலம் விசாரித் துள்ளனர். பாதுகாப்பில்லாததால் ஊருக்கு திரும்பி வரும்படி யும் பலர் அழைத்துள்ளனர், என்ற விபரங்களை இதன் பிறகு அறிந்து கொள்ள முடிந்தது.
ஆக ஒரு மாதத்திற்கு முன்பு இங்கு பரப்பப்பட்ட வதந்தி, நேர் எதிரான வேறு அர்த்தத்தில் இப்போது உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பரப்பப்பட்டுக் கொண்டி ருப்பது தெரிகிறது. வட மாநிலத் தொழிலாளர்கள், தமிழக தொ ழிலாளர்களை தாக்குவதாக இங்கே செய்தி பரப்பப்பட்டது. அதற்கு நேர் மாறாக வட மாநிலத் தொழிலாளர்களை, தமிழக தொழிலாளர்கள் தாக்குவதாக அங்கே செய்தி பரப்பி யுள்ளனர். இது போகிற போக்கில் யாரோ சிலர் பரப்பிய வதந்தியாக தெரியவில்லை. நடைபெற்ற சம்பவங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை வைத்து பார்க்கும் பொழுது இது சுயநல அரசியல் சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ஜனவரி 14ஆம் தேதி ஒரு தேநீர் கடையில் தேநீர் குடிக்க வந்த வட மாநில தொழிலாளர்கள் மீது மது போதையில் இருந்த ஒரு சமூக விரோத கும்பல் சிகரெட் புகையை முகத்தில் ஊதிய தால் பிரச்சனை துவங்கியது. அந்த சமூக விரோத கும்பல் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. சிகரெட் புகை ஊதியதை தொடர்ந்து இருதரப்பு மோதலாக மாறியபோதே, “வட மாநில தொழிலா ளர்கள் தமிழர்களாகிய எங்களை தாக்குகிறார்கள்”, என்று பிரச்சனையை திரித்து, திசை திருப்பி, சுற்றிலும் இருந்த வர்களிடம் அனுதாபம் தேடி தப்பிக்க பார்த்தனர். ஆனால் அப்போது எதுவும் எடுபடவில்லை. அதற்கு சில வாரங்களுக்குப் பிறகே, தமிழர்களை தாக்கு வதாக வீடியோ, ஒரே நாளில் திடீரென எல்லா பக்கமும் பரப்பப் பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. இப்போது ஒரு மாதம் கழித்து, வட இந்தியாவில் இதே போன்று, மொத்தமாக சமூக ஊடகங்க ளில் ஒரே சமயம் வதந்தி பரப்பும் உத்தி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது போகிற போக்கில் முன்வைக்கப்படும் வாதம் அல்ல. திருப்பூரில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் விரும்பி வாசிக்கக்கூடிய இந்தி நாளேட்டில் பிரசுரித்திருப்ப தாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அதில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “எங்க ளால் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு தர முடியாது”, என்று சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் முதல மைச்சர் அப்படி எதுவும் சொல்லவில்லை என்பது இங்குள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். அந்த செய்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்திற்கு அருகிலேயே, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் படமும் பிரசுரிக்கப்பட்டு, அவர் கூறியதாகவும் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளனர். “தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, எனவே அங்கு வேலை செய்பவர்கள் இங்கே திரும்பி வந்து விடுங்கள்”, என்று அவர் கூறியதாகவும் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
முதலமைச்சர் பாதுகாப்பு தர முடியாது என்கிறார், அதே சமயம் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக முதல்வர் ஆதித்ய நாத் பாதுகாப்பிற்காக இங்கே வாருங்கள் என்று “இந்தி தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு தருகிறார்,” என்பதான ஒரு தோற்றத்தை உருவாக்குவதை தவிர இந்த பொய்ச் செய்தியில் வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? இதிலேயே வதந்தியை யார் பரப்பி இருப்பார்கள் என்பதை உணர முடிகிறது. அதுவும் குறிப்பாக மார்ச் முதல் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் அன்று சென்னையில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மதச்சார்பற்ற எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்திய நிலை யில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று அழைப்பு விட்டிருக்கக் கூடிய நிலையில், வட இந்தியாவில் தமிழ்நாட்டிற்கும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கும் எதிராக ஒரு வதந்தி அலை பரவி யுள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக சென்னை பொதுக் கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அகிலேஷ் யாதவ், பீகாரில் இருந்து தேஜஸ்வி ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்தி பேசும் தங்கள் சொந்த மக்களுக்கு எதி ரான தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு முதலமைச்சர் கூட்டிய கூட்டத் தில், இவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள் என்று, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒரு எதிர் மனநிலையை உரு வாக்கும் நோக்கம் இல்லாமல் இருக்குமா? தங்கள் சொந்த ஆதாயத்திற்காக எத்தகைய கீழ் நிலைக்கும் செல்வதற்கு தயங்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஆல் ஊட்டி வளர்க்கப்படும் சங் பரிவாரக் கும்பல். ஏனென்றால் அமைதி அவர்களுக்கு பிடிக்காது. கலவரமும் பதற்றமும் தான் அவர்க ளது மூலதனம். பல ஆயிரம் கிலோமீட்டர் புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் பற்றியோ, அவர்கள் பிழைப்ப தற்காக நடத்தும் வாழ்க்கைப் போராட்டம் பற்றியோ அவர்க ளுக்கு அக்கறை இல்லை. குறுகிய மத, இன உணர்வைத் தூண்டி விட்டு குளிர் காய வேண்டும். அதற்கு அவர்கள் நம்பும் வலிமையான (உண்மையில் பலவீனமான) ஆயுதம் தான் வதந்தி, வதந்தி, வதந்தி!!
வே.தூயவன்