states

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

புதுதில்லி, டிச.6- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. டிசம்பர் 29-ஆம் தேதி  வரை மொத்தம் 17 அமர்வுகளாக (வேலைநாட் கள்) நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் 25 புதிய மசோதாக்கள் வரை தாக்கல் செய்யப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதை யொட்டி, செவ்வாயன்று ஒன்றிய அரசின் பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலை மையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடை பெற்றது. ஒன்றிய அரசின் சார்பில் நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அமைச்சர்கள் முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால், பியூஷ் கோயல் ஆகி யோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் டி.ஆர். பாலு, சிபிஎம்  தலைவர் எளமரம் கரீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கள், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்  பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதத்திற்கு அனு மதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  அதேபோல இந்திய தேர்தல் ஆணையர் நிய மனத்தில் காட்டப்பட்ட அவசரம் பற்றியும், ஒன்றிய பாஜக அரசால், சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவை தவ றாக பயன்படுத்தப்படுவது குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, போதை பொருள் விநியோ கம் மற்றும் நுகர்வு அதிகரிப்பு, விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கு வது உள்ளிட்ட விவகாரங்களையும் பேச அனு மதிக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து பேசிய, நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்  ஜோஷி, விதிகள் மற்றும் அவைத் தலைவ ரின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து விவ காரங்களை பற்றியும் ஆலோசனை நடத்தவும் மற்றும் விவாதம் மேற்கொள்ளவும் அரசு தயா ராக உள்ளது என்று உறுதியளித்தார். ஊடகங்களோடு உரையாடுகிறாரா? இதனிடையே முதல் நாளில் ஊடகங்களு டன் பிரதமர் மோடி உரையாடக் கூடும் என மக்க ளவை செயலகம் தெரிவித்து உள்ளது.