states

img

கார்ப்பரேட்களுக்கான கூடுதல் வரியை 7 சதவிகிதமாக குறைத்த மோடி அரசு!

புதுதில்லி, பிப்.2- மோடி அரசு யாருக்கானது, சமா னியார்களுக்கானதா, பெருமுதலாளி களுக்கானதா? என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்ற னர். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கான கூடுதல் வரியை 12-இல் இருந்து 7 சதவிகிதமாக குறைத்து, ‘நாங்கள் என்றுமே பெருமுதலாளிகளின் சேவ கர்கள்தான்’ என்பதை மோடி அரசு மீண் டும் உறுதிப்படுத்தியுள்ளது. உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்க ளின், 1 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான வருவாய்க்கு 7 சத விகிதமும், 10 கோடி ரூபாய்க்கு அதிக மாக வருவாய் கிடைக்கும் பட்சத்தில் 12 சதவிகிதமும் இதுவரை கூடுதல் வரியாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வரியை தற்போதைய பட்ஜெட்டில் 12-இல் இருந்து 7 சதவிகித மாக நரேந்திர மோடி அரசு குறைத்துள் ளது. அதாவது 10 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்க ளுக்கு வரிக் குறைப்பை வாரி வழங்கி யுள்ளது.

அதுமட்டுமல்ல, 10 கோடி ரூபாய்க்கு மேலான வருமானம் ஈட்டும் நிறுவனங்க ளின், வருமான வரியும் கூடுதல் வரியும் 10 கோடி ரூபாயை தாண்டும் பட்சத்தில்- இந்த குறைந்தபட்ச 7 சதவிகித கூடுதல் வரியும் விதிக்கப்படாது. ஒட்டுமொத்தமாக, பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு மீண்டும் மீண்டும் சலுகைகளை வாரி இறைத்துள்ளது. அதேநேரம், நாட்டில் கோடிக்கணக் கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிவரும், ‘எம்எஸ்எம்இ’ (Ministry of Micro, Small and Medium Enterprises- MSME) எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை யினருக்கு எந்தவொரு வரிக்குறைப்பை யும் வழங்காமல் மோடி அரசு அவர்களை வஞ்சித்துள்ளது. இது இந்தப்பிரிவு தொழிற்துறையை மேலும் நலிவடை யச் செய்யும் நிலையை உருவாக்கி யுள்ளது. கொரோனா காலத்தில் நடுத்தர வர்க்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரியை குறைப்பது,

நாட்டின் பொருளாதாரத்தில் தேவையை அதிகரித்து, அது உற்பத்தி மற்றும் வர்த்த கத்தில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் கூறி னர். ஆனால், அதற்கு பட்ஜெட்டில் எந்த மதிப்பையும் மோடி அரசு கொடுக்க வில்லை. 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் தொடங் கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவிகித கார்ப்பரேட் வரி விகித வரிச்சலுகையை அரசு ஏற்கெனவே அறி வித்து இருந்தது. அதற்கான காலக்கெடு இப்போது 2024, மார்ச் 31 வரை நீட் டிக்கப்பட்டுள்ளது. வரிச் சலுகைகளைப் பெறுவதற்கு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங் களுக்கான கால அவகாசமும் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.