பயங்கரவாதத்திற்கு மோடி அரசின் மதவெறுப்பு சூழ்நிலையே காரணம்!
மும்பை பாஜக அரசு உருவாக்கியுள்ள மத வெறுப்பு சூழ்நிலையே பயங்கர வாதத்திற்கு காரணம் என சிவ சேனா கூறிள்ளது. சிவசேனாவின் அதிகாரப் பூர்வ ஏடான “சாம்னா” தனது தலையங்கத்தில் கூறியுள்ளதாவது: “ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் இன்னும் முடிந்து விடவில்லை. பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் காஷ்மீர் கொள்கை தோல்வியடைந் துள்ளது. பாகிஸ்தானை மிரட்டுவதால் இந்த பிரச்சனை தீராது. பிரதமர் மோடி மற்றும் பிற பாஜக தலைவர்கள் பாகிஸ்தானுக்கு வெற்று அச்சுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் விடுக்கின்றனர். இதுபோன்ற மிரட்டல்கள் பிர தமர் மோடியின் பக்தர்களை மகிழ்விக்குமே தவிர வேறொன்றும் நிகழப் போவதில்லை. பாஜக ஆட்சியில் காஷ்மீர் கொந்தளிப்பில் உள்ளது. பயங்கரவாதிகள் எல்லையை கடந்து இந்தியாவிற்குள் நுழைந்து குற்றமற்ற அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். முழு நாட்டிலும் மத வெறுப்பு சூழ்நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும் பாலோர் இந்துக்கள். சிலர் முஸ்லிம்கள். இதற்கு பாஜக என்ன சொல்லப் போகிறது? மோடியின் பொய் அம்பலமாகியுள்ளது பிரதமர் மோடி தொடர்ந்து சொல்கிறார், “நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது” என்று. ஆனால் பிரதமர் மோடியின் பொய் பஹல்காம் தாக்குதல் மூலம் அம்பலமாகியுள்ளது. 370 ஆவது பிரிவு நீக்கப்பட்ட போது காஷ்மீர் பள்ளத் தாக்கில் பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்று அமித் ஷா பெருமையாகக் கூறினார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தினமும் இரத்த நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அமித் ஷா உமிழும் பொய்கள் அதில் கலந்து வருகின்றன. இந்த நிலைமைக்கு அமித் ஷா என்ன கூறப் போகி றார்? புல்டோசர் கொண்டாட்டங்கள் உண்மை நிலவரம் என்னவென்றால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் இன்னும் முடிய வில்லை. 2019இல் 370ஆவது பிரிவு நீக்கப் பட்டதிலிருந்து, காஷ்மீரில் 197 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அதே போல 135 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் என 700 சந்தேக நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இது பள்ளத் தாக்கில் வன்முறை முடிந்து விட்டதற்கான அடை யாளமே அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக இந்து-முஸ்லிம் வெறுப்பு விஷத்தை நாடு முழுவதும் பரப்பி, நிரந்தரக் கலவரச் சூழ் நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது. ஏழை முஸ்லிம்களின் வீடுகள் மீது புல்டோ சர்கள் ஓட்டப்பட்டன. அப்போது பாஜக - ஆர்எஸ்எஸ் களிப்புடன் கொண்டாடின. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பஹல்காம் சம்பவம் மூலம் நாட்டின் அமைதியும் ஒற்று மையும் அழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ் வொரு பிரச்சனைக்கும் ஒன்றிய பாஜக அர சாங்கம் கூறும் ஒரே ஒரு பதில்: இந்து-முஸ்லிம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய 4 வார்த்தை கள் தான். உளவு அமைப்புகள் இருக்கிறதா? புல்வாமாவிற்குப் பிறகு பஹல்காம் தாக்கு தல் மூலம் உளவு முகமைகளின் முழுமையான தோல்வி ஆகும். ஜேம்ஸ்பாண்ட் போல் நடிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் எங்கே சென்றார்? ஜம்மு-காஷ்மீரில் குஜராத் பார்முலா ஏன் வேலை செய்யவில்லை? எதிர்க் கட்சிகளை துன்புறுத்தவும், மாநில அரசாங் கங்களை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், எம்எல்ஏ மற்றும் எம்.பி.க்களை தங்கள் பக்கம் வளைக்கவும், அரசியலுக்காக உள்துறை அமைச்சகம், காவல்துறை மற்றும் உளவு முகமைகளை அமித் ஷா பயன்படுத்து கிறார். பிறகு எப்படி தேசிய பாதுகாப்பு விஷ யங்களை உளவுத்துறை அமைப்புகள் கவ னிக்கும். இந்துக்களின் மரணத்தை பேசி, முஸ்லிம்களை களங்கப்படுத்தி, பாகிஸ்தா னின் பெயர் மற்றும் குண்டு வெடிப்புகளால் வாக்குகள் கேட்பது பாஜகவின் பாரம்பரிய வணிகமாக உள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்தபோது, பிரதமர் மோடி சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தி யாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். நிலை மை இப்படி இருக்கையில் இரத்தப்பலி நடந்த பிறகு அமித் ஷா காஷ்மீரை அடைந்தார். இந்து மக்களின் காவலன் என கூறும் அமித் ஷா, காஷ்மீரில் இந்து மக்களும் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வாரா? முர்ஷி தாபாத் வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ராஜினாமா செய்ய பாஜகவினர் பொங்கினர். ஆனால் காஷ்மீர் சம்பவத்திற்கு ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்க தயாராக இல்லை.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.