states

கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆக.14-ல் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை,ஆக.8- கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற  கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆகஸ்ட் 14 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: காவிரி டெல்டா மாவட்டங்களில், குறு வை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு குறுவைத் திட்டத்தை அறிவித்தது. இம்முறை டெல்டா  மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால் சில பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் வராததால் சாகுபடி செய்த நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரு கிறது. 2023-2024 ஆம் ஆண்டில், 2023 ஜூன்  1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டும். ஆனால் இதுவரை 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழுக் கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு உள்ள நிலையிலும்  கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளதால் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் பயிர்கள் கருகியுள்ளன.

காவிரிப் பிரச்சனையில் உச்சநீதி மன்றம் வரை போராடி பெறப்பட்ட தீர்ப்பினை  அமலாக்க மறுப்பதுடன் மேகதாது அணைப் பிரச்சனை உட்பட புதிய பிரச்சனைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் நியாயத்தை மறுத்து வருகிறது கர்நாடக அரசு. தீர்ப்பினை அமலாக்கும்படி வற்புறுத்த வேண்டிய ஒன்றிய அரசு, அரசியல் சுயலாபத்துடன் மௌ னம் காப்பதுடன், கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று பொறுப் பில்லாமல் பேசி வரும் போக்கு கண்டிக்கத் தக்கது. குறுவை பயிர்கள் கருகி வரும் அவசர  சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணை யம் உடனடியாக தலையிட வேண்டும்.  தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 14 அன்று டெல்டா மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்ட த்தில் விவசாய பெருங்குடி மக்கள், விவ சாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் என  அனைத்துத் தரப்பினரும்  கலந்து கொண்டு  பேராதரவு அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.